23 19
இலங்கைசெய்திகள்

முப்படையினருக்கான புதிய நிவாரணத்திட்டத்தை அறிவித்த அரசாங்கம்

Share

முப்படையினருக்கான புதிய நிவாரணத்திட்டத்தை அறிவித்த அரசாங்கம்

இலங்கையில் தேர்தல் நெருங்கும் நேரத்தில் முக்கிய பிரதான வேட்பாளர்கள் அரசத்துறை மற்றும் படையினரின் நலன்கள் குறித்து தமது உறுதிமொழிகளை அறிவித்து வருகின்றனர்.

ஏற்கனவே அநுரகுமார திசாநாயக்கவின் தேசிய மக்கள் சக்தி, தமது தேர்தல் விஞ்ஞாபனத்தில் படையினருக்கான நலன் திட்டங்களை அறிவித்திருந்தது

சஜித் பிரேமதாசவும் படையினருக்கான தமது திட்டங்களை அறிவித்துள்ளார்

இந்தநிலையில், ஆயுதப்படையினருக்கான நிவாரணக் கொடுப்பனவு வழங்கும் முறைமையில் குறிப்பிடத்தக்க மாற்றம் எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் நடைமுறைப்படுத்தப்படும் என அரசாங்கம் அறிவித்துள்ளது

இது வேட்பாளர் ரணில் விக்ரமசிங்கவின் பிரசாரத்தின் ஒரு பகுதியாக பார்க்கப்படுகிறது.

இந்த திட்டத்தை பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரேமித பண்டார தென்னகோன் அறிவித்துள்ளார்.

புதிய முறையின் கீழ் முப்படையினரின் மாதாந்த சம்பளத்துடன் நிவாரணக் கொடுப்பனவுகள் இணைக்கப்படும் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.

புடையினரின் நிதி நிலையை மேம்படுத்துவதற்கும், நிதி விவகாரங்களில் வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புக்கூறலை மேம்படுத்துவதும் இந்த சீரமைப்பின் நோக்கமாக உள்ளது என்றும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

Share
தொடர்புடையது
1654603198 litro gas distribution
செய்திகள்இலங்கை

யாழ்ப்பாண மாவட்டத்திற்குத் தேவையான எரிவாயு சிலிண்டர்கள் கையிருப்பு: கட்டம் கட்டமாக விநியோகம்!

யாழ்ப்பாண மாவட்டத்திற்குத் தேவையான சமையல் எரிவாயு சிலிண்டர்கள் (LPG Cylinders) கொண்டுவரப்பட்டுள்ளதாகவும், விநியோக நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும்...

25 692c8763b7367
செய்திகள்இலங்கை

இலங்கையில் அனர்த்த உயிரிழப்புகள் 465 ஆக அதிகரிப்பு; 366 பேர் காணாமல் போயினர் – அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தகவல்!

நாட்டின் 25 மாவட்டங்களையும் பாதித்துள்ள அனர்த்த நிலைமை காரணமாக, உயிரிழந்தோரின் எண்ணிக்கை 465 ஆக அதிகரித்துள்ளதாக...

images 1
செய்திகள்இலங்கை

ரயில் பயணிகள் அவதானம்: நவம்பர் மாதப் பருவச் சீட்டின் செல்லுபடி காலம் டிசம்பர் 7 வரை நீடிப்பு!

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை மற்றும் ரயில் போக்குவரத்துப் பாதிப்புகள் காரணமாக, நவம்பர் மாதத்துக்கான ரயில்...

images
செய்திகள்இலங்கை

மீட்புப் பணிகள் நடக்கும் இடங்களில் ட்ரோன்களைப் பறக்க விட வேண்டாம்: இலங்கை விமானப்படை எச்சரிக்கை!

நாட்டில் ஏற்பட்டுள்ள பேரழிவு காரணமாகப் பல பகுதிகளில் மீட்புப் பணிகள் தீவிரமாக இடம்பெற்றுவரும் நிலையில், அப்பகுதிகளில்...