நாடாளுமன்றத் தேர்தலில் கோவிந்தன் கருணாகரத்தின் நிலைப்பாடு

24 66fa89db4924c

நாடாளுமன்றத் தேர்தலில் கோவிந்தன் கருணாகரத்தின் நிலைப்பாடு

எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணியாக குத்துவிளக்குக்கு பதிலாக சங்கு சின்னத்தில் களமிறங்கவுள்ளதாக தமிழீழ விடுதலை இயக்கத்தின் செயலாளர் நாயகம் கோவிந்தன் கருணாகரம் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பில் உள்ள அவரது அலுவலகத்தில் இன்று (30.09.2024) நடைபெற்ற ஊடகவியலளார் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ் தேசியத்தின் மீது பற்றுக்கொண்ட இளைஞர்களை இணையுமாறும் அவர் அழைப்பு விடுத்துள்ளார்.

மேலும், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் அழைப்பு தொடர்பில் எதிர்காலத்தில் பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டு தீர்மானிக்கப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.

Exit mobile version