tamilni 285 scaled
இலங்கைசெய்திகள்

அரச ஊழியர்களுக்கான பதவி உயர்வு குறித்து ஆலோசனை

Share

அரச ஊழியர்களுக்கான பதவி உயர்வு குறித்து ஆலோசனை

அரச ஊழியர்களுக்கு பதவி உயர்வு வழங்க வேண்டியது அவர்களின் திறமைக்கு ஏற்பவே என அமைச்சர் ரொஷான் ரணசிங்க ஆலோசனை வழங்கியுள்ளார்.

நாடாளுமன்றத்தில வைத்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், அரச சேவையில் பொறுப்புணர்வின்மை காரணமாக நாட்டின் நீர் முகாமைத்துவப் பிரச்சினை மோசமடைந்துள்ளது.

எனது அமைச்சில் உள்ள எந்தவொரு அதிகாரியும் தமது பொறுப்பையும், பொறுப்புக்கூறலையும் நிறைவேற்றவில்லை என்றால் இது தொடர்பில் ஒழுக்காற்று நடவடிக்கை எடுப்பதற்கான ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இவர்கள் குறித்து அமைச்சின் செயலாளர் ஊடாக விசாரணை நடத்தி உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என குறிப்பிட்டுள்ளார்.

மேலும் நாம் ஒரு நாடாக உயர வேண்டுமானால், இந்த நாட்டில் உள்ள அரச ஊழியர்களுக்கு பதவி உயர்வு வழங்க வேண்டியது அவர்களின் சேவைக் காலத்தின் அடிப்படையில் அல்ல, மாறாக அவர்களின் திறமைக்கு ஏற்பவே என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
image 1200x800 14 1
செய்திகள்இலங்கைபிராந்தியம்

அக்குரேகொட கொலை வழக்கு: சந்தேகநபர்களுக்குத் தடுப்புக்காவல்! – நூற்றுக்கணக்கான சட்டத்தரணிகள் நீதிமன்றில் திரண்டனர்!

சட்டத்தரணி புத்திக மல்லவஆராச்சி மற்றும் அவரது மனைவி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட...

images 1 4
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ஜிந்துபிட்டி துப்பாக்கிச் சூடு: இரு பொலிஸ் அதிகாரிகள் கைது! – தலைமையகம் அதிரடி நடவடிக்கை!

கொழும்பு, ஜிந்துபிட்டி பகுதியில் கடந்த சனிக்கிழமை (14) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தின் போது, தமது...

image 1200x800 13
செய்திகள்இலங்கைபிராந்தியம்

சீகிரியாவில் சோகம்: காட்டு யானை தாக்கியதில் ஹங்கேரி நாட்டுச் சுற்றுலாப் பயணி பலி!

இலங்கையின் வரலாற்றுச் சிறப்புமிக்க சுற்றுலாத் தலமான சீகிரியா மற்றும் பிதுரங்கலை மலைக்கு இடைப்பட்ட காட்டுப்பகுதியில், காட்டு...

image 1200x800 35
செய்திகள்இலங்கை

ஓய்வுக்காலத்தின் சொர்க்கபுரி இலங்கை! – 2026-இல் உலகின் மிக மலிவான நாடாக முதலிடம்; ‘Travel + Leisure’ புகழாரம்!

உலகின் முன்னணி பயண மற்றும் வாழ்க்கைமுறை சஞ்சிகையான ‘Travel + Leisure’, 2026-ஆம் ஆண்டில் ஓய்வுபெற்ற...