3 12
இலங்கைசெய்திகள்

கடன் பெற்றுக்கொண்டாலும் விரயமாக்கமாட்டோம்: புதிய அரசாங்கம் அறிவிப்பு

Share

கடன் பெற்றுக்கொண்டாலும் விரயமாக்கமாட்டோம்: புதிய அரசாங்கம் அறிவிப்பு

கடன் பெற்றுக்கொண்டாலும் அவற்றை விரயமாக்கப்போவதில்லை என புதிய அரசாங்கம் தெரிவித்துள்ளது.

திறைசேரி உண்டியல்கள் மற்றும் பிணைமுறிகள் மூலம் கடன் பெற்றுக்கொண்டாலும் அவை உரிய முறையில் செலவிடப்படும் என கட்சியின் சிரேஸ்ட உறுப்பினர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.

கடந்த காலங்களில் பெற்றுக்கொண்ட கடன்களை செலுத்தவும், அரசாங்கத்தின் செலவுகளை ஈடு செய்யவும் இவ்வாறு கடன் பெற்றுக்கொண்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் நாட்டில் நிதியின்றி பணம் அச்சிடப்படவோ அல்லது திறைசேரி உண்டியல்கள் மூலம் புதிய கடன்கள் பெற்றுக்கொள்ளப்படவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அரசாங்கம் என்ற ரீதியில் தேவைக்கு ஏற்ற வகையில் திறைசேரி பத்திரங்களும், பிணைமுறிகளும் வெளியிடுவதாகவும், இவ்வாறு பெற்றுக்கொள்ளப்படும் கடன் வெளிப்படைத்தன்மையுடன் செலவிடப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கு மாறாக கடந்த அரசாங்கங்களைப் போன்று விரயமாக்கப்படமாட்டாது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Share
தொடர்புடையது
25 688de9f74b46a
இலங்கைசெய்திகள்

உள்நாட்டு இறைவரித் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு

2024/2025 மதிப்பீட்டு ஆண்டிற்கான வருமான அறிக்கைகளைச் சமர்ப்பிப்பதற்காக வழங்கப்பட்ட தனிப்பட்ட அடையாள எண்ணின் (PIN) செல்லுபடியாகும்...

25 688df4fc39fbe
இலங்கைசெய்திகள்

வாய்த்தர்க்கத்தில் ஒருவர் சுட்டுக்கொலை.. பொலிஸாரிடம் சரணடைந்த சந்தேகநபர்

அம்பலாந்தோட்டை, ஹுங்கம பிங்காம பகுதியில் இன்று (02) மதியம் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது....

25 688e26468e8e8
சினிமாசெய்திகள்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு காலமானார்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு உடல்நலக் குறைவால் காலமானார். அவர் தனது 71ஆவது வயதில்...

25 688e158f2c449
இலங்கைசெய்திகள்

சட்டத்தை நடைமுறைப்படுத்தியவரால் நிராகரிக்கப்பட்ட ஜனாதிபதி சிறப்புரிமைகள்

இலங்கையின் முதல் நிறைவேற்றதிகார ஜனாதிபதியான ஜே.ஆர்.ஜெயவர்த்தனவால் கொண்டுவரப்பட்ட ஜனாதிபதிகளுக்கான சலுகைகளை அவரே பெற்றுக்கொள்ளவில்லை என அரசியல்...