tamilni 609 scaled
இலங்கைசெய்திகள்

இந்திய முதலீடுகளை ஊக்குவிக்கும் இலங்கை

Share

இந்திய முதலீடுகளை ஊக்குவிக்கும் இலங்கை

இலங்கையில் இந்தியர்கள் மேற்கொள்ளும் முதலீடுகளை இந்திய ரூபாயில் மேற்கொள்வதற்கான செயற்பாட்டை இலங்கை ஊக்குவிப்பதாக இந்திய ஊடகமொன்று தெரிவித்துள்ளது.

ரூபாய்களின் முதலீடுகள், இந்திய நிறுவனங்கள் இலங்கைச் சந்தைகளுக்குள் நுழைவதற்கான வழியை எளிதாக்கும் என்று சந்தை தரப்பினரை கோடிட்டு இந்திய செய்திச்சேவை குறிப்பிட்டுள்ளது.

2023 ஆம் ஆண்டு இந்தி ரிசர்வ் வங்கி சர்வதேச வர்த்தகத்திற்கான விலைப்பட்டியலுக்கு இந்திய ரூபாயில் பணம் செலுத்த அனுமதித்தது. இந்திய ரிசர்வ் வங்கியின் இந்த முடிவு, இந்திய நாணயத்தை முறையாக சர்வதேசமயமாக்குவதைத் தவிர, உலகளாவிய வர்த்தகத்தின் வளர்ச்சியை, குறிப்பாக இந்திய ஏற்றுமதியை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

இதற்கிடையில் கடந்த ஆண்டு, இந்திய ரூபாயை ஒரு நியமிக்கப்பட்ட நாணயமாக இலங்கை அறிவித்தது, இது இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகத்தை நாணயத்தில் தீர்க்க உதவியது, அத்துடன் இலங்கைக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளின் பரிவர்த்தனைகளுக்கு ரூபாய் நாணயத்தைப் பயன்படுத்த வழியை ஏற்படுத்தியது.

இந்தநிலையில் இந்திய நிறுவனங்கள், இலங்கையில் முதலீடு செய்வதை எளிதாக்குவதற்கு இலங்கையுடன் இணைந்து பணியாற்ற இந்தியா விரும்புகிறது.

தற்போது, இந்திய முதலீட்டாளர்கள் டொலர் போன்ற சர்வதேச நாணயங்கள் மூலம் நாட்டில் முதலீடு செய்கிறார்கள், இது மிகவும் சிக்கலானது என்பதுடன் மாற்ற செலவுகளை உள்ளடக்கியது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே ரூபாயில் முதலீடுகள் இந்திய நிறுவனங்கள் இலங்கை சந்தைகளுக்குள் நுழைவதற்கான வழியை எளிதாக்கும் என்று இந்திய தரப்பு தெரிவித்துள்ளது எனினும் இந்திய நிதி அமைச்சகம் மற்றும் இந்திய ரிசர்வ் வங்கி என்பன இது தொடர்பில் உத்தியோகபூர்வ அறிவித்தல்களை இதுவரை வெளியிடவில்லை.

Share
தொடர்புடையது
images 1 6
செய்திகள்அரசியல்இலங்கை

மாகாண சபைத் தேர்தல் விரைவில் நடத்தப்படும்; நிறைவேற்று ஜனாதிபதி முறை நீக்கப்படும் – பிரதமர் ஹரினி அமரசூரிய!

மாகாண சபைத் தேர்தலை விரைவில் நடத்துவதற்கு அரசாங்கம் எதிர்பார்த்துள்ளதாகவும், அதற்கான ஆரம்பகட்ட நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு...

1693715245 THONDAMAN 2
செய்திகள்அரசியல்இலங்கை

இ.தொ.கா பொதுச் செயலாளர் பதவியில் இருந்து விலகப்போவதில்லை – ஜீவன் தொண்டமான் அதிகாரப்பூர்வ விளக்கம்!

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் (CWC) பொதுச் செயலாளர் பதவியில் இருந்து தாம் விலகப்போவதாக சமூக ஊடகங்களில்...

Karu Flood News Pix 03
செய்திகள்இலங்கை

சோமாவதி – சுங்காவில வீதி 3 அடி நீரில் மூழ்கியது: போக்குவரத்து முற்றாகத் துண்டிப்பு!

மகாவலி கங்கையின் நீர்மட்டம் அதிகரித்துள்ளதால், சோமாவதி புனித பூமிக்குச் செல்லும் பிரதான வீதி வெள்ளத்தில் மூழ்கியுள்ளது....

inject 251215
செய்திகள்இலங்கை

‘ஒன்டன்செட்ரோன்’ தடுப்பூசியால் நோயாளிகளுக்குப் பாதிப்பு: சுகாதார அமைச்சுக்கு அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் கடும் கண்டனம்!

சர்ச்சைக்குரிய ‘ஒன்டன்செட்ரோன்’ (Ondansetron) தடுப்பூசி செலுத்தப்பட்ட ஸ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலையின் சில நோயாளிகளுக்கும் உடல்நலச் சிக்கல்கள்...