tamilni 609 scaled
இலங்கைசெய்திகள்

இந்திய முதலீடுகளை ஊக்குவிக்கும் இலங்கை

Share

இந்திய முதலீடுகளை ஊக்குவிக்கும் இலங்கை

இலங்கையில் இந்தியர்கள் மேற்கொள்ளும் முதலீடுகளை இந்திய ரூபாயில் மேற்கொள்வதற்கான செயற்பாட்டை இலங்கை ஊக்குவிப்பதாக இந்திய ஊடகமொன்று தெரிவித்துள்ளது.

ரூபாய்களின் முதலீடுகள், இந்திய நிறுவனங்கள் இலங்கைச் சந்தைகளுக்குள் நுழைவதற்கான வழியை எளிதாக்கும் என்று சந்தை தரப்பினரை கோடிட்டு இந்திய செய்திச்சேவை குறிப்பிட்டுள்ளது.

2023 ஆம் ஆண்டு இந்தி ரிசர்வ் வங்கி சர்வதேச வர்த்தகத்திற்கான விலைப்பட்டியலுக்கு இந்திய ரூபாயில் பணம் செலுத்த அனுமதித்தது. இந்திய ரிசர்வ் வங்கியின் இந்த முடிவு, இந்திய நாணயத்தை முறையாக சர்வதேசமயமாக்குவதைத் தவிர, உலகளாவிய வர்த்தகத்தின் வளர்ச்சியை, குறிப்பாக இந்திய ஏற்றுமதியை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

இதற்கிடையில் கடந்த ஆண்டு, இந்திய ரூபாயை ஒரு நியமிக்கப்பட்ட நாணயமாக இலங்கை அறிவித்தது, இது இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகத்தை நாணயத்தில் தீர்க்க உதவியது, அத்துடன் இலங்கைக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளின் பரிவர்த்தனைகளுக்கு ரூபாய் நாணயத்தைப் பயன்படுத்த வழியை ஏற்படுத்தியது.

இந்தநிலையில் இந்திய நிறுவனங்கள், இலங்கையில் முதலீடு செய்வதை எளிதாக்குவதற்கு இலங்கையுடன் இணைந்து பணியாற்ற இந்தியா விரும்புகிறது.

தற்போது, இந்திய முதலீட்டாளர்கள் டொலர் போன்ற சர்வதேச நாணயங்கள் மூலம் நாட்டில் முதலீடு செய்கிறார்கள், இது மிகவும் சிக்கலானது என்பதுடன் மாற்ற செலவுகளை உள்ளடக்கியது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே ரூபாயில் முதலீடுகள் இந்திய நிறுவனங்கள் இலங்கை சந்தைகளுக்குள் நுழைவதற்கான வழியை எளிதாக்கும் என்று இந்திய தரப்பு தெரிவித்துள்ளது எனினும் இந்திய நிதி அமைச்சகம் மற்றும் இந்திய ரிசர்வ் வங்கி என்பன இது தொடர்பில் உத்தியோகபூர்வ அறிவித்தல்களை இதுவரை வெளியிடவில்லை.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...