tamilni 222 scaled
இலங்கைசெய்திகள்

அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பில் அமைச்சர் தகவல்

Share

அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பில் அமைச்சர் தகவல்

சம்பள அதிகரிப்பினை வழங்குவதன் ஊடாக மக்களின் வரி சுமை அதிகரித்து செல்வதாக அமைச்சர் பந்துல குணவர்தன (Bandula Gunawardena) தெரிவித்துள்ளார்.

அத்துடன், தற்போதைய தொழிற்சங்க நடவடிக்கைகளானது அரசியல் பழிவாங்கல் செயற்பாடுகளாகும் என அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்

கொழும்பில் (colombo) ஊடகங்களுக்குக் கருத்துத் தொிவித்தபோதே அவா் இதனைக் குறிப்பிட்டுள்ளாா்.

அவர் மேலும் தெரிவிக்கையில், சம்பள அதிகரிப்பை மேற்கொள்ள முடியாமானால் நிச்சயமாக நாம் பெற்றுக்கொடுப்போம்.

மக்களின் வரிப்பணத்திலேயே சம்பளம் வழங்கப்படுகின்றது. தொடர்ச்சியாக சம்பள அதிகரிப்பினை வழங்குவதன் ஊடாக மக்களின் வரிச் சுமை அதிகரித்து செல்கின்றது.

நாட்டின் வரிப்பணம் முழுவதனையும் சம்பளம் வழங்குவதற்கு செலவிட முடியாது.

ஏனெனில் வரிப்பணம் முழுவதனையும் சம்பளம் மற்றும் கொடுப்பனவுகள் வழங்குவதற்கு செலவிடுவதன் மூலம் நாட்டை முன்கொண்டு செல்லமுடியாது.

எனவே தற்போதைய நிலையில் முன்னெடுக்கப்படும் தொழிற்சங்க நடவடிக்கைகளானது அரசியல் பழிவாங்கல் செயற்பாடாகும் என அமைச்சர் பந்துல குணவர்தன (Bandula Gunawardena) மேலும் தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
21 1
இலங்கைசெய்திகள்

விபத்துக்குள்ளான கெப் ரக வாகனம்

புல்மோட்டையிலிருந்து சென்ற கெப் வாகனம் புடவைக்கட்டில் விபத்துக்குள்ளாகியுள்ளது. இன்று (23) அதிகாலை 04:35 மணியளவில் புல்மோட்டையில்...

19 2
இலங்கைசெய்திகள்

மூதூர் பிரதேச சபை இலங்கை தமிழரசுக் கட்சி வசம்!

திருகோணமலை – மூதூர் பிரதேச சபைக்கான, தவிசாளர் மற்றும் உதவி தவிசாளர் தெரிவு இன்று(23) கிழக்கு...

20
இலங்கைசெய்திகள்

இலங்கை ரூபாவின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள மாற்றம்

இலங்கை மத்திய வங்கி இன்றைய நாளுக்கான (23) நாணயமாற்று விகிதங்களை வெளியிட்டுள்ளது. அதன்படி, அமெரிக்க டொலர்...

22 1
உலகம்செய்திகள்

அமெரிக்க நகரங்களில் ட்ரம்பிற்கு எதிராக போராட்டத்தில் குதித்த மக்கள்

ஈரான்(IRAN) மீதான தாக்கு தலை கண்டித்தும் போரை உடனே நிறுத்த வேண்டும் என்றும் அமெரிக்காவில்(USA) பல்வேறு...