24 11
இலங்கைசெய்திகள்

மகிந்தவின் உயிருக்கு ஆபத்து நேர்ந்தால் ..: அநுர அரசை கடுமையாக எச்சரிக்கும் மொட்டு

Share

மகிந்தவின் உயிருக்கு ஆபத்து நேர்ந்தால் ..: அநுர அரசை கடுமையாக எச்சரிக்கும் மொட்டு

உலகில் கொடூரமான பயங்கரவாதத்தை தோற்கடித்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் (mahinda rajapaksa)116 பாதுகாப்பு உத்தியோகத்தர்களை நீக்கியதன் மூலம் அவருக்கான பாதுகாப்பை மீறியுள்ளதாகவும் அவரது உயிருக்கு ஏதேனும் ஆபத்து ஏற்பட்டால் அதற்கு தற்போதைய அரசாங்கமே பொறுப்பாகும் என சட்டத்தரணி ரவீந்திர ஜயசிங்க இன்று (13) தெரிவித்துள்ளார்.

பத்தரமுல்ல நெலும் மாவத்தையில் அமைந்துள்ள சிறிலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தலைமையகத்தில் இன்று (13) நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பிலேயே சட்டத்தரணி ரவீந்திர ஜயசிங்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.

நாட்டின் தேசிய பாதுகாப்பு முதலிடத்தில் இருக்க வேண்டும் என்றாலும், தேசிய பாதுகாப்பை சரியாக மதிப்பிடாமல், ஆழமாக ஆராயாமல், தேசிய பாதுகாப்பை குழிதோண்டிப் புதைக்கும் பல முடிவுகளை தற்போதைய அரசாங்கம் எடுத்துள்ளது என்றார்.

தற்போதைய அரசாங்கம் தேசிய பாதுகாப்பில் சமரசம் செய்யாமல், மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் சுமார் மூன்று மாதங்களாக இவ்வாறு செயற்பட்டு வருவதாகத் தெரிவித்த ரவீந்திர ஜயசிங்க, மகிந்த ராஜபக்சவே பயங்கரவாதத்தை முடிவுக்குக் கொண்டுவந்ததை இந்த அரசாங்கம் மறந்துவிட்டதாகவும் தெரிவித்தார் .

மேற்குலகின் நிகழ்ச்சி நிரலையும், அரசாங்கத்தை வழிநடத்தும் சதிகார சக்திகளையும் அரசாங்கம் பின்பற்றுகிறது என்பதை இவ்வாறான தீர்மானங்கள் நிரூபிப்பதாகவும், மிக மோசமான பயங்கரவாதத்தை முடிவுக்குக் கொண்டு வந்த தலைவர் தாம் என்பதை தற்போதைய அரசாங்கத்திற்கு நினைவுபடுத்துவதற்கு மகிந்த ராஜபக்ச இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொள்கிறார் எனவும் அவர் தெரிவித்தார்.

அவரைப் பாதுகாப்பது ஒரு நாடு என்ற ரீதியில் நாட்டின் பிரதான பொறுப்பு எனவும் அதற்கு அரசியல் அர்த்தமில்லை எனவும், அவரது உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டால் அதற்கு தற்போதைய அரசாங்கமே முழுப்பொறுப்பேற்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி அநுரகுமார(anura kumara) அரசாங்கம் கடந்த மூன்று மாதங்களாக வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை எனவும் கடந்த மூன்று மாதங்களாக மேற்குலக மற்றும் உள்ளூர் சக்திகளின் தேவைகளை பிரதிபலிக்கும் பல வாக்குறுதிகளை அரசாங்கம் நிறைவேற்றியுள்ளதாக சட்டத்தரணி ரவீந்திர ஜயசிங்க தெரிவித்துள்ளார்.

முன்னாள் ஜனாதிபதிகள் பல அரச நிறுவனங்களை தமக்குள் வைத்திருப்பதாக விமர்சித்த தற்போதைய ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, 94 அரச நிறுவனங்களை தமக்குக் கீழ் வைத்திருப்பதை கண்டுகொள்ளாமல் இருப்பது வருந்தத்தக்கது. கடந்த மூன்று மாத கால ஆட்சியில் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகள் பல நம்பிக்கைகளை அரசாங்கம் உடைத்துள்ளது என அவர் மேலும் தெரிவித்தார்.

Share
தொடர்புடையது
சிறைக்கு அழைத்து செல்லப்பட்ட
இலங்கை

சிறைக்கு அழைத்து செல்லப்பட்ட பூஜித் ஜயசுந்தர மற்றும் முன்னாள் ஹேமசிறி பெர்னாண்டோ.

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் நடத்தப்படவுள்ளதாக புலனாய்வு தகவல்கள் கிடைத்திருந்தபோதிலும், அதனைத் தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்காமை,...

Shooting 5
இலங்கை

சற்றுமுன் மிரிஸ்ஸ பகுதியில் துப்பாக்கிசூடு.

இன்றைய தினம், மிரிஸ்ஸ, சந்திப் பகுதியில் மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இருவரால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச்...

mnnnn
இலங்கை

தொழிலாளி மீது சரிந்து வீழ்ந்த மண்மேடு.

கண்டி, வில்லியம் கொபல்லவ மாவத்தையில் இன்று நண்பகல் 11.00 மணியளவில் வில்லியம் கொபல்லவ மாவத்தையிலுள்ள இடமொன்றில்...

sri lanka floo
இலங்கை

நாட்டில் மழை கிடைக்கவுள்ள பிரதேசங்கள் – வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு.

வளிமண்டலவியல் திணைக்களத்தினால், அடுத்த 36 மணித்தியாலங்களுக்கு அமுலாகும் வகையில் விசேட வானிலை முன்னறிவித்தல் ஒன்று விடுக்கப்பட்டுள்ளது....