24 11
இலங்கைசெய்திகள்

மகிந்தவின் உயிருக்கு ஆபத்து நேர்ந்தால் ..: அநுர அரசை கடுமையாக எச்சரிக்கும் மொட்டு

Share

மகிந்தவின் உயிருக்கு ஆபத்து நேர்ந்தால் ..: அநுர அரசை கடுமையாக எச்சரிக்கும் மொட்டு

உலகில் கொடூரமான பயங்கரவாதத்தை தோற்கடித்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் (mahinda rajapaksa)116 பாதுகாப்பு உத்தியோகத்தர்களை நீக்கியதன் மூலம் அவருக்கான பாதுகாப்பை மீறியுள்ளதாகவும் அவரது உயிருக்கு ஏதேனும் ஆபத்து ஏற்பட்டால் அதற்கு தற்போதைய அரசாங்கமே பொறுப்பாகும் என சட்டத்தரணி ரவீந்திர ஜயசிங்க இன்று (13) தெரிவித்துள்ளார்.

பத்தரமுல்ல நெலும் மாவத்தையில் அமைந்துள்ள சிறிலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தலைமையகத்தில் இன்று (13) நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பிலேயே சட்டத்தரணி ரவீந்திர ஜயசிங்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.

நாட்டின் தேசிய பாதுகாப்பு முதலிடத்தில் இருக்க வேண்டும் என்றாலும், தேசிய பாதுகாப்பை சரியாக மதிப்பிடாமல், ஆழமாக ஆராயாமல், தேசிய பாதுகாப்பை குழிதோண்டிப் புதைக்கும் பல முடிவுகளை தற்போதைய அரசாங்கம் எடுத்துள்ளது என்றார்.

தற்போதைய அரசாங்கம் தேசிய பாதுகாப்பில் சமரசம் செய்யாமல், மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் சுமார் மூன்று மாதங்களாக இவ்வாறு செயற்பட்டு வருவதாகத் தெரிவித்த ரவீந்திர ஜயசிங்க, மகிந்த ராஜபக்சவே பயங்கரவாதத்தை முடிவுக்குக் கொண்டுவந்ததை இந்த அரசாங்கம் மறந்துவிட்டதாகவும் தெரிவித்தார் .

மேற்குலகின் நிகழ்ச்சி நிரலையும், அரசாங்கத்தை வழிநடத்தும் சதிகார சக்திகளையும் அரசாங்கம் பின்பற்றுகிறது என்பதை இவ்வாறான தீர்மானங்கள் நிரூபிப்பதாகவும், மிக மோசமான பயங்கரவாதத்தை முடிவுக்குக் கொண்டு வந்த தலைவர் தாம் என்பதை தற்போதைய அரசாங்கத்திற்கு நினைவுபடுத்துவதற்கு மகிந்த ராஜபக்ச இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொள்கிறார் எனவும் அவர் தெரிவித்தார்.

அவரைப் பாதுகாப்பது ஒரு நாடு என்ற ரீதியில் நாட்டின் பிரதான பொறுப்பு எனவும் அதற்கு அரசியல் அர்த்தமில்லை எனவும், அவரது உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டால் அதற்கு தற்போதைய அரசாங்கமே முழுப்பொறுப்பேற்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி அநுரகுமார(anura kumara) அரசாங்கம் கடந்த மூன்று மாதங்களாக வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை எனவும் கடந்த மூன்று மாதங்களாக மேற்குலக மற்றும் உள்ளூர் சக்திகளின் தேவைகளை பிரதிபலிக்கும் பல வாக்குறுதிகளை அரசாங்கம் நிறைவேற்றியுள்ளதாக சட்டத்தரணி ரவீந்திர ஜயசிங்க தெரிவித்துள்ளார்.

முன்னாள் ஜனாதிபதிகள் பல அரச நிறுவனங்களை தமக்குள் வைத்திருப்பதாக விமர்சித்த தற்போதைய ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, 94 அரச நிறுவனங்களை தமக்குக் கீழ் வைத்திருப்பதை கண்டுகொள்ளாமல் இருப்பது வருந்தத்தக்கது. கடந்த மூன்று மாத கால ஆட்சியில் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகள் பல நம்பிக்கைகளை அரசாங்கம் உடைத்துள்ளது என அவர் மேலும் தெரிவித்தார்.

Share
தொடர்புடையது
25 688de9f74b46a
இலங்கைசெய்திகள்

உள்நாட்டு இறைவரித் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு

2024/2025 மதிப்பீட்டு ஆண்டிற்கான வருமான அறிக்கைகளைச் சமர்ப்பிப்பதற்காக வழங்கப்பட்ட தனிப்பட்ட அடையாள எண்ணின் (PIN) செல்லுபடியாகும்...

25 688df4fc39fbe
இலங்கைசெய்திகள்

வாய்த்தர்க்கத்தில் ஒருவர் சுட்டுக்கொலை.. பொலிஸாரிடம் சரணடைந்த சந்தேகநபர்

அம்பலாந்தோட்டை, ஹுங்கம பிங்காம பகுதியில் இன்று (02) மதியம் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது....

25 688e26468e8e8
சினிமாசெய்திகள்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு காலமானார்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு உடல்நலக் குறைவால் காலமானார். அவர் தனது 71ஆவது வயதில்...

25 688e158f2c449
இலங்கைசெய்திகள்

சட்டத்தை நடைமுறைப்படுத்தியவரால் நிராகரிக்கப்பட்ட ஜனாதிபதி சிறப்புரிமைகள்

இலங்கையின் முதல் நிறைவேற்றதிகார ஜனாதிபதியான ஜே.ஆர்.ஜெயவர்த்தனவால் கொண்டுவரப்பட்ட ஜனாதிபதிகளுக்கான சலுகைகளை அவரே பெற்றுக்கொள்ளவில்லை என அரசியல்...