12 5
இலங்கைசெய்திகள்

தேர்தல் சட்டத்தை மீறும் அரச அதிகாரிகளுக்கு கடும் நடவடிக்கை

Share

தேர்தல் சட்டத்தை மீறும் அரச அதிகாரிகளுக்கு கடும் நடவடிக்கை

ஜனாதிபதி தேர்தல் காலத்தில் அரச சொத்துக்கள் துஷ்பிரயோகம் செய்யப்படுவதைத் தடுக்க நடவடிக்கை எடுக்குமாறு தேர்தல்கள் ஆணைக்குழு, அமைச்சின் செயலாளர்கள் மற்றும் மாகாண பிரதம செயலாளர்களுக்கு உத்தரவிட்டுள்ளது.

அமைச்சின் செயலாளர்கள் மற்றும் மாகாண பிரதம செயலாளர்கள் அந்த நிறுவனங்களின் பிரதான உத்தியோகத்தர்கள் என்பதால் அவர்களுக்கு கீழ் உள்ள நிறுவனங்களில் முறைகேடு நடந்தால் அந்த அதிகாரிகளே பொறுப்பேற்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, இது தொடர்பில் தமது கீழ் உள்ள நிறுவனங்களின் தலைவர்களுக்கு அறிவிக்க நடவடிக்கை எடுக்குமாறு ஆணைக்குழு செயலாளர்களுக்கு அறிவித்துள்ளது.

இதேவேளை, அனைத்து அமைச்சுக்களின் செயலாளர்கள் மற்றும் மாகாண செயலாளர்களுக்கும் தேர்தல்கள் ஆணைக்குழு அழைப்பு விடுத்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...