24 6662a4721aa8b
இலங்கைசெய்திகள்

கொலை குற்றவாளியை நாட்டுக்கு அழைத்து வர முடியாத நிலையில் இலங்கை

Share

கொலை குற்றவாளியை நாட்டுக்கு அழைத்து வர முடியாத நிலையில் இலங்கை

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ரோயல் பார்க் கொலை வழக்கில் இருந்து டொன் சமந்த ஜூட் அந்தோனி ஜயமஹாவுக்கு வழங்கிய மன்னிப்பு தன்னிச்சையானது மற்றும் செல்லாது என்ற உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பைத் தொடர்ந்து, சிங்கப்பூரில் இருப்பதாக சந்தேகிக்கப்படும் கொலைக் குற்றவாளியை நாட்டிற்கு அழைத்து வருவதற்கான முயற்சிகளை இலங்கை அதிகாரிகள் தீவிரப்படுத்தியுள்ளனர்.

எவ்வாறாயினும், சிங்கப்பூருடன் இதுவரை கைதி பரிமாற்றம் தொடர்பான உடன்படிக்கையும் கைச்சாத்திடப்படாததால், இலங்கையின் முயற்சிகள் இந்த விடயத்தில் தோல்வியடையக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கொலை குற்றவாளியை நாட்டுக்கு அழைத்து வர முடியாத நிலையில் இலங்கை அரசாங்கம் | Royal Park Murder Case

இரண்டு நாடுகளின் சம்மதத்துடனேயே இதுபோன்ற ஒப்பந்தம் கையெழுத்தாகும். முன்னதாக இலங்கை பல நாடுகளுடன் இவ்வாறான ஒப்பந்தங்களில் கைச்சாத்திட்டுள்ளது.

ரோயல் பார்க் கொலை வழக்கில் சிறைத்தண்டனை பெற்றிருந்த ஜெயமஹா, நாட்டை விட்டு வெளியேற தடை விதித்து இடைக்கால உத்தரவு பிறப்பிக்கப்படுவதற்கு சில நாட்களுக்கு முன்னதாக 2019 நவம்பர் 15 அன்று இலங்கையை விட்டு வெளியேறிவிட்டதாக பொலிஸாரின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஜயமஹா, ஜனாதிபதியின் பொதுமன்னிப்பு பெற்ற உடனேயே 2019 நவம்பர் 13 அன்று கடவுச்சீட்டைப் பெற்றுள்ளார் என்பது தெரியவந்துள்ளது.

இந்தநிலையில் மன்னிப்புக்குப் பின்னால், அவர் உத்தியோகபூர்வமாக நாட்டில் இருந்து வெளியேறியமையால், இப்போது தேடப்படும் கைதி என்று சில நாடுகளில் உள்ள அதிகாரிகளிடம் மட்டுமே கோர முடியும்.

அத்துடன் அவரை நாட்டிற்கு நாடு கடத்துமாறு கோர முடியும் என்று பொலிஸ் பேச்சாளர்; நிஹால் தல்துவ கூறியுள்ளார்.

Share
தொடர்புடையது
20 2
இந்தியாசெய்திகள்

கரூர் துயரம் – ஆட்டம் காணும் த.வெ.க..! சி.பி.ஐ விசாரணையை கோரிய மோடி தரப்பு

தவெக தலைவர் விஜயின் கரூர் பிரசாரத்தின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர்...

19 2
இலங்கைசெய்திகள்

யாழில் கைதான பெண் சட்டத்தரணி – வடக்கில் வெடித்த போராட்டம்

உரிய வகையில் தேடுதல் ஆணை இல்லாது காவல்துறையினரால் சோதனை முன்னெடுக்கப்பட்டதாக கூறப்படும் சம்பவத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து...

18 3
இலங்கைசெய்திகள்

சிறிலங்காவின் போர்குற்றங்களுக்கு எதிரான நிலைப்பாட்டை அறிவித்த ஐ.நா

இலங்கை தொடர்பான மனித உரிமை மீறல்கள் மற்றும் மனித உரிமை மீறல்களுக்கான ஆதாரங்களை சேகரிக்கும் திட்டத்தை...

17 3
இலங்கைசெய்திகள்

மகிந்தவின் பாதுகாப்பு! நிலைப்பாட்டை அறிவித்த பொது பாதுகாப்பு அமைச்சர்

முன்னாள் ஜனாதிபதிகளுக்கு வழங்கப்பட்டுள்ள பாதுகாப்பு தொடர்பில் எவ்வித குறைப்பும் செய்யப்பட்டவில்லை. அவர்கள் கோரும் பாதுகாப்பு வழங்கப்படும்...