3 45
இலங்கைசெய்திகள்

கோட்டாபய வழியில் பயணிக்கும் அரசாங்கம்: ரோஹினி குற்றச்சாட்டு

Share

கோட்டாபய வழியில் பயணிக்கும் அரசாங்கம்: ரோஹினி குற்றச்சாட்டு

அரசாங்கம் பெருந்தொகை பணத்தை அச்சிட்டு வருவதாக ஐக்கிய மக்கள் சக்தியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹினி கவிரட்ன குற்றம் சுமத்தியுள்ளார்.

 

இலங்கை மத்திய வங்கி சுமார் நூறு பில்லியன் ரூபாவிற்கும் மேற்பட்ட பணத்தை அச்சிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

 

ஏல விற்பனை மற்றும் தவணை ஏல விற்பனை ஆகியனவற்றின் மூலம் இவ்வாறு பணம் அச்சிடப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

 

கடந்த 25ம் திகதி ஏல விற்பனை மூலம் 36.16 பில்லியன் ரூபா பணத்தையும், கடந்த வாரம் தவணை ஏல விற்பனை மூலம் 70 பில்லியன் ரூபாவினையும் அரசாங்கம் அச்சிட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

 

அரசாங்கம் இவ்வாறு பணத்தை அச்சிடுவதன் மூலம் கப்ரால் – கோட்டாபய யுகம் நினைவிற்கு வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.

 

நாட்டின் பணவீக்கத்தை கட்டுப்படுத்த வேண்டுமாயின் பணம் அச்சிடுவதனை வரையறுக்க வேண்டும் என ரோஹினி கவிரட்ன தெரிவித்துள்ளார்.

 

நாட்டின் பொருளாதார இருண்ட பாதையில் பயணிப்பதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

 

Share
தொடர்புடையது
25 6947c9eb14d31
உலகம்செய்திகள்

பங்களாதேஷில் தீப்பிடிக்கும் வன்முறை: அரசியல்வாதியின் வீட்டுக்குத் தீ வைப்பு; 7 வயது மகள் உடல் கருகி பலி!

பங்களாதேஷில் மாணவர் இயக்கத் தலைவர் ஷெரீப் உஸ்மான் ஹாடி சுட்டுக்கொல்லப்பட்டதை அடுத்து வெடித்துள்ள கலவரம், தற்போது...

Namal Rajapaksa 1
செய்திகள்அரசியல்இலங்கை

நிவாரணம் 10% மக்களுக்கே சென்றடையும்; நடைமுறைச் சாத்தியமான திட்டங்கள் அவசியம்” – நாமல் ராஜபக்ச காட்டம்!

அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதில் அரசாங்கம் கடைப்பிடிக்கும் தற்போதைய நடைமுறைகள் போதுமானதாக இல்லை என...

பேராதனை
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பேராதனை பல்கலைக்கழகம் மீண்டும் திறப்பு: 29ஆம் திகதி முதல் கல்வி நடவடிக்கைகள் ஆரம்பம்!

‘டித்வா’ சூறாவளி மற்றும் அதனால் ஏற்பட்ட வெள்ள அனர்த்தம் காரணமாகத் தற்காலிகமாக மூடப்பட்டிருந்த பேராதனை பல்கலைக்கழகத்தின்...

25 69475175d454d
செய்திகள்அரசியல்இலங்கை

இலங்கையை மீட்டெடுக்க இந்தியாவின் ‘பேருதவித் திட்டம்’: நாளை கொழும்பு வருகிறார் ஜெய்சங்கர்!

புயல், வெள்ளம் மற்றும் மண்சரிவு போன்ற இயற்கை அனர்த்தங்களால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கையை மீட்டெடுப்பதற்கான பாரிய உதவித்...