4 49
இலங்கைசெய்திகள்

வாகன விலைகளில் பெரும் மோசடி: விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவுறுத்தல்

Share

வாகன விலைகளில் பெரும் மோசடி: விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவுறுத்தல்

இலங்கையில் பதிவு செய்யப்பட்ட வாகனங்களின் விலைகளை பொய்யாக குறைக்கும் முயற்சி இடம்பெற்று வருவதாக வாகன இறக்குமதி சந்தைப்பிரதிநிதிகள் தெரிவிக்கின்றனர்.

 

வாகன இறக்குமதி கட்டுப்பாடுகளை அரசாங்கம் தளர்த்துவதற்கு எதிர்பார்க்கும் பின்னணியில் இந்த மோசடி இடம்பெறுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

 

தற்போது சமூக ஊடகங்களில் வாகனங்களின் போலி விலைகள் பரப்பப்பட்டு வருவதாகவும், பயன்படுத்திய வாகனங்களின் சந்தை மதிப்பைக் குறைப்பதே இதன் முக்கிய நோக்கம் என்றும் அந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

 

இலங்கையிலுள்ள வாகன இறக்குமதி நிறுவனங்களும் இது தொடர்பில் கவனம் செலுத்தி வருவதாக கூறப்படுகின்றது.

 

முன்னணி நிறுவனங்களில் ஒன்றான ஏ. எம். டபிள்யூ. எதிர்காலத்தில் இறக்குமதி செய்யப்படவுள்ள புதிய வாகனங்களுக்கு பொய்யான விலைகளைக் குறிப்பிட்டு தற்போது சமூக ஊடகங்கள் மூலம் பல செய்திகள் திருத்தப்பட்டு வருவதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

 

புதிய வாகனங்களின் விலையை கணக்கிட சந்தை விலை மாற்றங்களை உன்னிப்பாக கவனித்து வருவதாகவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

 

இறக்குமதி செய்யப்படும் என எதிர்பார்க்கப்படும் புதிய வாகனங்களின் விலைகளுக்கு பொய்யான விலையை விளம்பரம் செய்து தற்போது பதிவு செய்யப்பட்ட வாகனங்களின் விலையை குறைக்க முயற்சிப்பதாக வாகன இறக்குமதியாளர்கள் கூறுகின்றனர்.

Share
தொடர்புடையது
25 693b75dbdb13b
இலங்கைசெய்திகள்

காதலிக்கு ஸ்மார்ட் ஃபோன், மீதிப் பணத்தைச் சூதாட்டம்: அளுத்கமையில் கொள்ளையிட்ட இளைஞன் கைது!

அளுத்கமைப் பகுதியில் பணம் மற்றும் தங்க நகைகளைக் கொள்ளையிட்ட சம்பவம் தொடர்பாக 18 வயதுடைய ஒருவர்...

the economic times tamil
இலங்கைசெய்திகள்

தங்கத்தின் விலை மீண்டும் உயர்வு: 24 கரட் பவுண் ரூ. 339,000!

நாட்டில் இன்றையதினம், 24 கரட் தங்கம் பவுண் ஒன்றின் விலை, நேற்றைய தினத்துடன் ஒப்பிடுகையில் 3,000...

images 7 4
உலகம்செய்திகள்

ChatGPT தூண்டுதலால் தாயைக் கொன்ற மகன்: Open AI மீது குடும்பத்தினர் வழக்கு!

அமெரிக்காவின் கனெக்டிகட் மாகாணத்தைச் சேர்ந்த சோல்பெர்க் (Saulberg) என்பவர் கடந்த ஆகஸ்ட் 3ஆம் திகதி தனது...

25 693bfb6f9f0d2
உலகம்செய்திகள்

திடீர் காலநிலை மாற்றங்கள் அதிகரிக்கின்றன: ஐ.நா.வின் கடுமையான எச்சரிக்கை!

உலகம் முழுவதும் திடீர் காலநிலை மாற்றங்கள் அதிகரித்து வருவதாக ஐக்கிய நாடுகள் சபை (ஐ.நா.) நேற்று...