13 6
இலங்கைசெய்திகள்

அரசாங்கம் உள்நாட்டு சந்தையில் பெருந்தொகை கடன்

Share

அரசாங்கம் உள்நாட்டு சந்தையில் பெருந்தொகை கடன்

இந்த ஆண்டு ஜனவரி முதலாம் திகதி முதல் மே 31ஆம் திகதி வரையில் சுமார் 3,380 பில்லியன் ரூபாவை அரசாங்கம் உள்நாட்டு சந்தையில் கடனாகப் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜூன் 13ஆம் திகதி வெளியிடப்பட்ட மத்திய வங்கியின் பகுப்பாய்வு அறிக்கையில் இந்த விடயம் தெரியவந்துள்ளதாக பேராதனை பல்கலைக்கழகத்தின் பொருளாதாரம் மற்றும் புள்ளியியல் துறையின் சிரேஷ்ட பேராசிரியர் வசந்த அத்துகோரள தெரிவித்துள்ளார்.

இங்கு 05 மாதங்களில் சுமார் 3085 பில்லியன் ரூபா திறைசேரி உண்டியல்கள் மூலமாகவும் 785 பில்லியன் ரூபாவை திறைசேரி பத்திரங்கள் மூலமாகவும் அரசாங்கம் கடனாக பெற்றுள்ளது.

2024 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் 878 பில்லியன் ரூபாவும், பெப்ரவரி மாதத்தில் 661 பில்லியன் ரூபாவும், மார்ச் மாதத்தில் 843 பில்லியன் ரூபாவும், ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் 720 பில்லியன் ரூபாவும், இதன் பின்னர் 779 பில்லியன் ரூபாவும் கடனாகப் பெறப்பட்டுள்ளது.

சராசரியாக ஒரு மாதத்தில் பெறப்பட்ட உள்நாட்டுக் கடன் தொகை 775 பில்லியன் ரூபாவைத் தாண்டியுள்ளதாகவும், ஒரு நாளில் எடுக்கப்பட்ட சராசரி கடன் தொகை சுமார் 25 பில்லியன் ரூபா எனவும் பேராசிரியர் வெளிப்படுத்தியுள்ளார்.

அரசாங்கம் வாங்கிய கடன் பணமும் இதுவரை பெற்ற மற்றைய கடன்களை திருப்பிச் செலுத்துவதற்காக செலவழிக்கப்படுவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Share
தொடர்புடையது
Untitled 1 2
சினிமாசெய்திகள்

ஜனநாயகன் கடைசி படம் இல்லையா? விஜய் பதிலால் குஷியில் ரசிகர்கள்

இன்று நடிகர் விஜய்யின் பிறந்தநாள் என்பதால் அதை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். அவர் ஏற்கனவே அரசியல்...

Untitled 1 1
சினிமாசெய்திகள்

விஜய்க்காக த்ரிஷா போட்ட பதிவு.. வைரலாகும் போட்டோவை பாருங்க

நடிகர் விஜய்க்கு இன்று பிறந்தநாள் என்பதால் பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் வாழ்த்து மழை பொழிந்து வருகின்றனர்....

19 1
உலகம்செய்திகள்

டொனால்ட் ட்ரம்பின் நீண்ட கால திட்டம்! குறி வைக்கப்பட்டுள்ள ஈரானின் முக்கிய இடங்கள்

ஒன்று அமைதி, இல்லாவிட்டால் ஈரானுக்கு அழிவு. ஈரானில் இன்னும் பல முக்கிய இடங்களை குறி வைத்துள்ளோம்...

18 2
இலங்கைசெய்திகள்

நாடாளுமன்ற ஊழியர்களுக்கான உணவு கட்டணத்தில் மேற்கொள்ளப்படும் திருத்தம்

நாடாளுமன்ற ஊழியர்களுக்கு விதிக்கப்படும் உணவு கட்டணங்களை திருத்தியமைக்க நாடாளுமன்ற குழு தீர்மானித்துள்ளது. நாடாளுமன்ற குழு கூடியபோது...