rtjy 226 scaled
இலங்கைசெய்திகள்

பில்லியன் கணக்கான டொலர் வருமானத்தை ஈட்ட அரசாங்கம் திட்டம்

Share

பில்லியன் கணக்கான டொலர் வருமானத்தை ஈட்ட அரசாங்கம் திட்டம்

இரத்தினக்கற்கள் ஏற்றுமதி மூலம் 2025 ஆம் ஆண்டளவில் 2 பில்லியன் அமெரிக்க டொலர் வருடாந்த வருமானத்தை ஈட்ட எதிர்பார்ப்பதாக தேசிய இரத்தினக்கல் மற்றும் ஆபரண அதிகார சபையின் தலைவர் விராஜ் டி சில்வா தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி ஊடகப் பிரிவினால் இடம்பெற்ற நிகழ்வில் உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்

இந்த வருடத்தின் முதல் ஏழு மாதங்களில் இரத்தினக்கற்கள் ஏற்றுமதி மூலம் சுமார் 312 மில்லியன் அமெரிக்க டொலர்களை வருமானம் பெற்றுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

இதேவேளை, தேசிய இரத்தினம் மற்றும் ஆபரண ஆணையம் இந்த ஆண்டு இறுதிக்குள் 500 மில்லியன் அமெரிக்க டொலர்களை எட்டும் என கணித்துள்ளது.

இதேவேளை, சட்டவிரோத இரத்தினக்கல் ஏற்றுமதியை கட்டுப்படுத்தும் நோக்கில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பணிப்புரைக்கு அமைய வேலைத்திட்டம் ஒன்றை நடைமுறைப்படுத்துவது குறித்தும் அவர் கவனம் செலுத்தியுள்ளார்.

நாட்டிற்குள் ஏலம் விடுவதன் மூலம் வெளிநாட்டு கொள்வனவு செய்பவர்கள் நேரடியாக இரத்தினக்கற்களை கொள்வனவு செய்வதற்கு தேவையான நடவடிக்கைகள் உடனடியாக எடுக்கப்படும்.

இதன்படி, வெளிநாட்டு கொள்வனவு செய்பவர்கள் இந்த நாட்டில் உள்ள ஏலங்களில் நேரடியாக இரத்தினக்கற்களை கொள்வனவு செய்வதற்கு தேவையான நடவடிக்கைகள் விரைவில் மேற்கொள்ளப்படும் என வும் தெரிவித்துள்ளார்.

 

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...