16 6
இலங்கைசெய்திகள்

அரசு ஊழியர்களின் எண்ணிக்கையில் ஏற்பட்டுள்ள திடீர் மாற்றம்

Share

இலங்கையில் அரசாங்க ஊழியர்களின் எண்ணிக்கையில் கணிசமான வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதற்கமைய 2025 ஆண்டின் முதல் காலாண்டுடன் ஒப்பிடும்போது இரண்டாவது காலாண்டில் நாட்டில் தனியார் துறை ஊழியர்களின் எண்ணிக்கை அதிகரித்திருந்தாலும், அரச ஊழியர்களின் எண்ணிக்கை சுமார் 200,000 குறைந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

முதல் காலாண்டில் நாட்டில் அரச ஊழியர்களின் எண்ணிக்கை 1,302,185 ஆகவும், இரண்டாவது காலாண்டில் 1,165,094 ஆகவும் குறைந்துள்ளதாக திணைக்களத்தின் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

முதல் காலாண்டில் நாட்டில் தனியார் துறை ஊழியர்களின் எண்ணிக்கை 3,808,235 ஆகவும், இரண்டாவது காலாண்டில் 3,814,313 ஆகவும் அதிகரித்துள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

மேலும், முதல் காலாண்டில் 8,461,936 ஆக இருந்த நாட்டில் பொருளாதார ரீதியாக இயங்கும் மக்கள் தொகை, இரண்டாவது காலாண்டில் 8,491,296 ஆக அதிகரித்துள்ளது.

ஆனால் நாட்டில் பொருளாதார ரீதியாக இயங்கும் மக்கள் தொகையை விட செயலற்ற மக்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளதாக மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Share
தொடர்புடையது
images 10 4
செய்திகள்இலங்கை

தனியார் துறை ஊழியர்களுக்கும் ஓய்வூதியம்? அரசாங்கம் புதிய திட்டம் குறித்து ஆலோசனை!

தனியார் துறை ஊழியர்களின் எதிர்கால நலனைக் கருத்திற்கொண்டு அவர்களுக்குப் புதிய ஓய்வூதியத் திட்டமொன்றை (Pension Scheme)...

sajith
செய்திகள்இலங்கை

நாடாளுமன்றத்தில் பரபரப்பு: பெண் ஊழியர் துன்புறுத்தல் அறிக்கை ஏன் மறைக்கப்படுகிறது? சஜித் பிரேமதாச கேள்வி!

நாடாளுமன்ற பெண் ஊழியர்கள் எதிர்கொண்ட பாலியல் துன்புறுத்தல்கள் தொடர்பான விசாரணை அறிக்கை, நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்படாமல்...

செய்திகள்இலங்கை

இலங்கை மின்சார சபை மறுசீரமைப்பு இறுதிக்கட்டத்தில்! ஊழியர்களின் நலன்களுக்கு முக்கியத்துவம் என அறிவிப்பு!

நாட்டின் எதிர்கால மின்சாரத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் நோக்கில் திட்டமிடப்பட்டுள்ள இலங்கை மின்சார சபையின் (CEB)...

96b6d210 5408 11ef b8c3 f76c0a5f70a8.jpg
செய்திகள்உலகம்

யுனுஸின் ஆட்சி சட்டவிரோதமானது! – இந்தியாவிலிருந்து ஷேக் ஹசீனா விடுத்த முதல் பகிரங்க அறிக்கை!

கடந்த 2024-ஆம் ஆண்டு பங்களாதேஷில் ஏற்பட்ட மக்கள் புரட்சியைத் தொடர்ந்து நாட்டை விட்டு வெளியேறி இந்தியாவில்...