16 6
இலங்கைசெய்திகள்

அரசு ஊழியர்களின் எண்ணிக்கையில் ஏற்பட்டுள்ள திடீர் மாற்றம்

Share

இலங்கையில் அரசாங்க ஊழியர்களின் எண்ணிக்கையில் கணிசமான வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதற்கமைய 2025 ஆண்டின் முதல் காலாண்டுடன் ஒப்பிடும்போது இரண்டாவது காலாண்டில் நாட்டில் தனியார் துறை ஊழியர்களின் எண்ணிக்கை அதிகரித்திருந்தாலும், அரச ஊழியர்களின் எண்ணிக்கை சுமார் 200,000 குறைந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

முதல் காலாண்டில் நாட்டில் அரச ஊழியர்களின் எண்ணிக்கை 1,302,185 ஆகவும், இரண்டாவது காலாண்டில் 1,165,094 ஆகவும் குறைந்துள்ளதாக திணைக்களத்தின் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

முதல் காலாண்டில் நாட்டில் தனியார் துறை ஊழியர்களின் எண்ணிக்கை 3,808,235 ஆகவும், இரண்டாவது காலாண்டில் 3,814,313 ஆகவும் அதிகரித்துள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

மேலும், முதல் காலாண்டில் 8,461,936 ஆக இருந்த நாட்டில் பொருளாதார ரீதியாக இயங்கும் மக்கள் தொகை, இரண்டாவது காலாண்டில் 8,491,296 ஆக அதிகரித்துள்ளது.

ஆனால் நாட்டில் பொருளாதார ரீதியாக இயங்கும் மக்கள் தொகையை விட செயலற்ற மக்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளதாக மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Share
தொடர்புடையது
30 4
உலகம்செய்திகள்

நீண்ட இடைவெளிக்குப் பின் சீனா – வடகொரியா பயணிகள் தொடருந்து சேவை நாளை மீள ஆரம்பம்!

கோவிட்-19 பெருந்தொற்று பரவல் காரணமாக கடந்த ஆறு ஆண்டுகளாக இடைநிறுத்தப்பட்டிருந்த சீனா மற்றும் வடகொரியா இடையிலான...

29 4
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பேலியகொட மீன் சந்தை கழிவு உரம் தயாரிப்பு: பொது சுகாதார பரிசோதகர் விசாரணைக்கு நீதிமன்றம் உத்தரவு!

பேலியகொட மெனிங் மீன் சந்தையில் எஞ்சியிருக்கும் மீன்களைப் பயன்படுத்தி தனியார் நிறுவனம் ஒன்று உரம் தயாரிக்கும்...

28 4
செய்திகள்விளையாட்டு

2026 உலகக்கோப்பை கால்பந்து தொடரிலிருந்து ஈரான் விலகல்: விளையாட்டுத்துறை அமைச்சர் அறிவிப்பு!

அமெரிக்கா, கனடா மற்றும் மெக்சிகோ ஆகிய நாடுகளின் கூட்டுத் தலைமையின்கீழ் நடைபெறவுள்ள 2026 உலகக்கோப்பை கால்பந்து...

27 4
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணை பதற்றம்: மசகு எண்ணெய் விலை 200 டொலரை எட்டக்கூடும் என ஈரான் எச்சரிக்கை!

மத்திய கிழக்கில் நிலவும் தீவிர போர்ச் சூழல் மற்றும் ஹோர்முஸ் நீரிணையில் வர்த்தகக் கப்பல்கள் மீது...