இலங்கைசெய்திகள்

அரச ஊழியர்களுக்கு 50ஆயிரம் ரூபா அடிப்படைச் சம்பளம்! அநுர அரசாங்கத்திற்கு எச்சரிக்கை

Share
14 4
Share

ரச ஊழியர்களின் அடிப்படைச் சம்பளத்தை 50 ஆயிரம்ரூபா வரை உயர்த்துமாறு பல்வேறு தொழிற்சங்கங்கள் ஒன்றிணைந்து அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளன.

கடந்த வரவு செலவுத்திட்டத்தின் போது 24,250 ரூபாவாக இருந்த அடிப்படைச் சம்பளம், 40 ஆயிரம் ரூபாவாக அதிகரிக்கப்படுவதாக ஜனாதிபதி அறிவித்திருந்தார்.

அதற்காக 15,750 ரூபா சம்பள அதிகரிப்பும் அரசாங்க ஊழியர்களுக்கு வழங்கப்பட்டிருந்தது.

எனினும் தற்போதைய விலைவாசி உயர்வின் காரணமாக இந்தச் சம்பளம் செலவுகளைச் சமாளித்துக் கொள்ளப் போதுமானதாக இல்லாத காரணத்தினால், அடிப்படைச் சம்பளத்தை குறைந்த பட்சமாக 50 ஆயிரம் ரூபாவாக உயர்த்துமாறு பல்வேறு தொழிற்சங்கங்கள் வலியுறுத்தியுள்ளன.

அரசாங்கம் அதற்கான நடவடிக்கைகளை துரிதமாக முன்னெடுக்காத பட்சத்தில் தொழிற்சங்க நடவடிக்கைகளை மேற்கொள்ள நேரிடும் என்றும் அவை எச்சரிக்கை விடுத்துள்ளன.

Share
Related Articles
16 4
உலகம்செய்திகள்

அமெரிக்காவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

அமெரிக்காவின் டெக்சாஸின் (Texas ) எல் பாசோ நகருக்கு அருகில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள்...

20 5
உலகம்செய்திகள்

இஸ்ரேலின் சர்வதேச விமான நிலையத்தில் விழுந்து வெடித்த ஏமனின் ஏவுகணை

ஏமனின் ஹவுதிப்படையினாரால் (Houthi ) ஏவப்பட்ட ஏவுகணை, இஸ்ரேலின் பென் குரியன் சர்வதேச விமான நிலையத்தில்...

17 4
இலங்கைசெய்திகள்

யாழில் முதலில் அவருக்கு கால் வைக்க முடியுமா! கடற்றொழில் அமைச்சர் பகிரங்கம்

அநுரவை யாழ்ப்பாணத்தில் கால் வைக்க விடமாட்டோம் எனக் கூறுகின்ற நபர் முதலில் தனக்கு கால் வைக்க...

18 4
உலகம்செய்திகள்

பாப்பரசர் என்று சித்தரிக்கும் AI படத்தால் ட்ரம்ப் மீது கடும் விமர்சனம்

தன்னை பாப்பரசர் என்று சித்தரிக்கும் AI யால் உருவாக்கப்பட்ட படத்தைப் பகிர்ந்ததற்காக, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட்...