2 16
இலங்கைசெய்திகள்

அரச ஊழியர்களுக்கான சம்பள அதிகரிப்பு தொடர்பில் பிரதமர் வெளியிட்ட தகவல்

Share

அரச ஊழியர்களுக்கான சம்பள அதிகரிப்பு தொடர்பில் பிரதமர் வெளியிட்ட தகவல்

எதிர்காலத்தில் அரச உத்தியோகத்தர்களுக்கான சம்பள அதிகரிப்பு வழங்கப்படும் என பிரதமர் ஹரிணி அமரசூரிய உறுதியளித்துள்ளார்.

அலரிமாளிகையில் இன்று(08.02.2025) ஆசிரியர் மற்றும் அதிபர்கள் தொழிற்சங்கக் கூட்டமைப்பினரை சந்தித்து கலந்துரையாடிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது, பதவி உயர்வுகள், சம்பள முரண்பாடுகள், தொழில் பிரச்சினைகள், ஆசிரியர் அதிபர் சேவையில் முறையான இடமாற்றம், பாடசாலைகளுக்கு மாணவர்களை அனுமதித்தல் மற்றும் நிதி சேகரிப்பு, தேசிய பாடசாலைகளில் அதிபர் வெற்றிடங்களுக்கு ஆட்சேர்ப்பு, மற்றும் புதிய கல்வி சீர்திருத்தங்கள் போன்ற விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளன.

இதேவேளை, அரை அரசுப் பள்ளிகளில் வசூலிக்கப்படும் கட்டணம், ஒரு வகுப்பில் மாணவர்களின் எண்ணிக்கையை 35ஆக மட்டுப்படுத்தல் மற்றும் ஆசிரியர் ஆலோசனைப் பணிக்கான பரீட்சை உள்ளிட்ட விடயங்கள் குறித்தும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

வெற்றிடங்கள் இன்றி சிறுவர்கள் பாடசாலைகளுக்கு அனுமதிக்கப்படாமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், கல்வி அமைச்சு இதற்கான கடிதங்களை வழங்குவதில்லை எனவும் பிரதமர் இங்கு சுட்டிக்காட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
images 5 5
செய்திகள்இலங்கை

திருமலை புத்தர் சிலை அகற்றம்: அமைதியின்மை குறித்துப் பொலிஸ் அறிக்கை – “சமாதானத்திற்காகவும், பாதுகாப்பிற்காகவும் அகற்றினோம்” என விளக்கம்!

திருகோணமலை துறைமுகப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கடற்கரைப் பிரதேசத்தில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட புத்தர் சிலை ஒன்றை அகற்றியமை...

images 4 6
செய்திகள்இலங்கை

இலங்கையில் பெண்களுக்கு எதிரான வன்முறை அதிகரிப்பு: வீட்டு வன்முறை உச்சம்!

2024 நவம்பர் மாதம் முதல் இவ்வாண்டு ஒக்டோபர் மாதம் வரை மகளிர் மற்றும் சிறுவர்கள் அலுவல்கள்...

images 3 6
செய்திகள்இலங்கை

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறிய 31 தமிழக மீனவர்களுக்கு 10 வருடங்கள் ஒத்திவைக்கப்பட்ட சிறைத் தண்டனை விதிப்பு!

இலங்கை கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைந்து கடற்றொழிலில் ஈடுபட்ட 31 தமிழக கடற்றொழிலாளர்களுக்கு பருத்தித்துறை நீதிமன்றம் 10...

25 691abc1d14e03
செய்திகள்இலங்கைபிராந்தியம்

தாயை பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொன்ற 13 வயது மகள் விளக்கமறியலில்!

பதுளைப் பிரதேசத்தில், தனது காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த தாயின் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்த...