இலங்கைசெய்திகள்

அரச ஊழியர்களுக்கான சம்பள அதிகரிப்பு தொடர்பில் பிரதமர் வெளியிட்ட தகவல்

Share
2 16
Share

அரச ஊழியர்களுக்கான சம்பள அதிகரிப்பு தொடர்பில் பிரதமர் வெளியிட்ட தகவல்

எதிர்காலத்தில் அரச உத்தியோகத்தர்களுக்கான சம்பள அதிகரிப்பு வழங்கப்படும் என பிரதமர் ஹரிணி அமரசூரிய உறுதியளித்துள்ளார்.

அலரிமாளிகையில் இன்று(08.02.2025) ஆசிரியர் மற்றும் அதிபர்கள் தொழிற்சங்கக் கூட்டமைப்பினரை சந்தித்து கலந்துரையாடிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது, பதவி உயர்வுகள், சம்பள முரண்பாடுகள், தொழில் பிரச்சினைகள், ஆசிரியர் அதிபர் சேவையில் முறையான இடமாற்றம், பாடசாலைகளுக்கு மாணவர்களை அனுமதித்தல் மற்றும் நிதி சேகரிப்பு, தேசிய பாடசாலைகளில் அதிபர் வெற்றிடங்களுக்கு ஆட்சேர்ப்பு, மற்றும் புதிய கல்வி சீர்திருத்தங்கள் போன்ற விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளன.

இதேவேளை, அரை அரசுப் பள்ளிகளில் வசூலிக்கப்படும் கட்டணம், ஒரு வகுப்பில் மாணவர்களின் எண்ணிக்கையை 35ஆக மட்டுப்படுத்தல் மற்றும் ஆசிரியர் ஆலோசனைப் பணிக்கான பரீட்சை உள்ளிட்ட விடயங்கள் குறித்தும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

வெற்றிடங்கள் இன்றி சிறுவர்கள் பாடசாலைகளுக்கு அனுமதிக்கப்படாமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், கல்வி அமைச்சு இதற்கான கடிதங்களை வழங்குவதில்லை எனவும் பிரதமர் இங்கு சுட்டிக்காட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Share
Related Articles
26 1
இலங்கைசெய்திகள்

இறுதியாக கிளிநொச்சியில் தமிழ்த் தேசியத் தலைமையை பார்த்தோம் – சிறிதரன் பகிரங்கம்

நாங்கள் இறுதியாக கிளிநொச்சியில் எங்கள் தலைவரை பார்த்தோம். அங்கு தான் பல வரலாறுகளை கற்றோம் என...

28 1
இலங்கைசெய்திகள்

இந்தியாவிலிருந்து கிடைத்த தகவல்! கட்டுநாயக்க விமான நிலையத்தில் திடீர் சோதனை

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் விசேட சோதனை நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவிலிருந்து கிடைத்த தகவலுக்கமையவே இந்த...

27 1
உலகம்ஏனையவைசெய்திகள்

15 மணிநேர செய்தியாளர் சந்திப்பை நடத்தி சாதனை நிகழ்த்தியுள்ள மாலைத்தீவின் ஜனாதிபதி

மாலைத்தீவு ஜனாதிபதி முகமது முய்சு(Mohamed Muizzu )கிட்டத்தட்ட 15 மணி நேரமாக செய்தியாளர் சந்திப்பு ஒன்றை...

29
இலங்கைசெய்திகள்

யாழ்ப்பாணம் ஏழாலைக்குள்தானே இருக்கின்றது..! உளறியவருக்கு சுமந்திரன் பதிலடி

ஒருவர் யாழ்ப்பாணம் ஏழாலைக்குள்தானே இருக்கின்றது என்கின்றார். இதற்கு முன்னர் இரண்டு இலட்சம் மக்கள்தான் நாட்டின் சனத்தொகை...