28 10
இலங்கைசெய்திகள்

அரச உத்தியோகத்தர்களின் சம்பள அதிகரிப்பு: அமைச்சர் வெளியிட்ட தகவல்

Share

அரச உத்தியோகத்தர்களின் சம்பள அதிகரிப்பு: அமைச்சர் வெளியிட்ட தகவல்

அரசாங்க ஊழியர் சம்பள கொடுப்பனவை அதிகரிப்பதன் மூலம் ஊழியர்களுக்கும் மாதாந்தம் குறைந்தபட்சம் 55,000 ரூபா அல்லது அதற்கும் அதிகமான தொகை கிடைக்குமென போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுஜன ஊடகத்துறை அமைச்சர், அமைச்சரவைப் பேச்சாளர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற விசேட செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்ட அமைச்சர் இதனைத் குறிப்பிட்டார்.

அரச உத்தியோகத்தர்களின் சம்பள அதிகரிப்பு மற்றும் வாழ்க்கைச் செலவு கொடுப்பனவு தொடர்பில் பல தவறான கருத்துக்கள் பரப்பப்பட்டு வருவதாகவும், அமைச்சரவையில் எடுக்கப்பட்ட தீர்மானம் தவறான கருத்தாக இருக்குமானால் அதனைத் திருத்துவது தனது கடமை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தற்போதைய அரசாங்கத்தின் அமைச்சரவைப் பேச்சாளர் என்ற ரீதியில் தாம் முக்கிய அமைச்சரவை முடிவுகளை மக்களுக்கு அறிவிப்பதாகவும், ஆனால் சில அமைச்சரவை தீர்மானங்கள் மக்களுக்கு உரிய முறையில் தெரிவிக்கப்படுவதில்லை எனவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

அண்மையில் அமைச்சரவை கூடிய போது அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பான அமைச்சரவை பத்திரத்தை சமர்ப்பித்ததாகவும் அதில் 02 முக்கிய விடயங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

“அனைத்து அரச ஊழியர்களுக்கும் மூன்றாண்டுகளுக்கு மறுசீரமைப்பின்றி ரூ.25,000 கொடுப்பனவு வழங்கப்படும். இரண்டாவதாக, அடிப்படை சம்பளம் திருத்தப்படாவிட்டால், 24% முதல் 25% வரை உயரும். அரச பணியில் உள்ள குறைந்த ஊழியர்களுக்கு குறைந்தபட்சம் ரூ. 55,000 அல்லது அதற்கு மேல் அதிகமான தொகை கிடைக்குமென தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
images 10 4
செய்திகள்இலங்கை

தனியார் துறை ஊழியர்களுக்கும் ஓய்வூதியம்? அரசாங்கம் புதிய திட்டம் குறித்து ஆலோசனை!

தனியார் துறை ஊழியர்களின் எதிர்கால நலனைக் கருத்திற்கொண்டு அவர்களுக்குப் புதிய ஓய்வூதியத் திட்டமொன்றை (Pension Scheme)...

sajith
செய்திகள்இலங்கை

நாடாளுமன்றத்தில் பரபரப்பு: பெண் ஊழியர் துன்புறுத்தல் அறிக்கை ஏன் மறைக்கப்படுகிறது? சஜித் பிரேமதாச கேள்வி!

நாடாளுமன்ற பெண் ஊழியர்கள் எதிர்கொண்ட பாலியல் துன்புறுத்தல்கள் தொடர்பான விசாரணை அறிக்கை, நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்படாமல்...

செய்திகள்இலங்கை

இலங்கை மின்சார சபை மறுசீரமைப்பு இறுதிக்கட்டத்தில்! ஊழியர்களின் நலன்களுக்கு முக்கியத்துவம் என அறிவிப்பு!

நாட்டின் எதிர்கால மின்சாரத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் நோக்கில் திட்டமிடப்பட்டுள்ள இலங்கை மின்சார சபையின் (CEB)...

96b6d210 5408 11ef b8c3 f76c0a5f70a8.jpg
செய்திகள்உலகம்

யுனுஸின் ஆட்சி சட்டவிரோதமானது! – இந்தியாவிலிருந்து ஷேக் ஹசீனா விடுத்த முதல் பகிரங்க அறிக்கை!

கடந்த 2024-ஆம் ஆண்டு பங்களாதேஷில் ஏற்பட்ட மக்கள் புரட்சியைத் தொடர்ந்து நாட்டை விட்டு வெளியேறி இந்தியாவில்...