7 27
இலங்கைசெய்திகள்

எரிபொருள் விலை குறித்து பொய்ப்பிக்கப்பட்டுள்ள பிரசாரம்

Share

எரிபொருள் விலை குறித்து பொய்ப்பிக்கப்பட்டுள்ள பிரசாரம்

எரிபொருள் விலைகள் தொடர்பில் தேசிய மக்கள் சக்தி செய்து வந்த பிரசாரம் பொய்ப்பிக்கப்பட்டுள்ளது என முன்னாள் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

மாத்தறை பிரதேசத்தில் நேற்று நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டமொன்றில் அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

தாம் எரிசக்தி அமைச்சராக கடமையாற்றிய காலத்தில் தமது சட்டைப்பைக்குள் தரகுப்பணம் செல்வதாக தேசிய மக்கள் சக்தி சுமத்திய குற்றச்சாட்டு அடிப்படையற்றது என அவர் தெரிவித்துள்ளார்.

அண்மையில் மேற்கொள்ளப்பட்ட எரிபொருள் விலை மாற்றத்தின் மூலம் இந்த குற்றச்சாட்டுக்கள் பொய்ப்பிக்கப்பட்டுள்ளன.

தனது சட்டைப் பைக்குள் பணம் கிடைக்கப்பெற்றிருந்தால் அந்தப் பணம் தற்பொழுது துறைசார் அமைச்சர் அநுரகுமார திஸாநாயக்கவிற்காகும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

எவ்வாறெனினும், எரிபொருள் விற்பனையின் உண்மை நிலையை வெளிப்படுத்திய அரசாங்கத்திற்கு நன்றி பாராட்டுவதாக தெரிவித்துள்ளார்.

நீண்ட காலமாக தேசிய மக்கள் சக்தி, எரிபொருள் விலை குறித்து வெளியிட்டு வந்த தகவல்களின் உண்மை நிலை அம்பலபமாகியுள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Share
தொடர்புடையது
f9249630 b942 11f0 94ea 0d369b0104d5.jpg
செய்திகள்இந்தியா

விண்வெளித் துறையில் இந்தியா சாதனை: ‘பாகுபலி’ விண்கலம் மூலம் அமெரிக்க செயற்கைக்கோள் வெற்றிகரமாக ஏவப்பட்டது!

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் (ISRO) வலிமைமிக்க விண்கலமான எல்.வி.எம்-3 (LVM3-M6), இன்று காலை 8:55...

images 4 6
இலங்கைஅரசியல்செய்திகள்

டிட்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்காக 25,000 கிலோ கிராம் போஷணைப் பொருட்களை வழங்கியது யுனிசெப்!

டிட்வா (Ditwa) சூறாவளி மற்றும் அதனால் ஏற்பட்ட வெள்ளம், மண்சரிவு காரணமாகப் பாதிக்கப்பட்ட சிறுவர்களின் மந்தபோஷணை...

images 3 7
செய்திகள்அரசியல்இலங்கை

தமிழர்களின் பூர்விகக் காணிகளை ஆக்கிரமிக்காதீர் – நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் காட்டம்!

முல்லைத்தீவு மாவட்டத்தின் கொக்கிளாய் மற்றும் கொக்குத்தொடுவாய் பகுதிகளில் தமிழ் மக்களுக்குச் சொந்தமான பூர்விகக் காணிகள் ஆக்கிரமிக்கப்படுவதற்கு...

chambikka
செய்திகள்அரசியல்இலங்கை

யூதர்களை இலக்கு வைத்து இலங்கையிலும் தாக்குதல் நடக்க வாய்ப்பு – பாட்டாலி சம்பிக ரணவக்க எச்சரிக்கை!

அவுஸ்திரேலியாவில் யூதர்களைக் குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதலைப் போன்ற சம்பவங்கள் இலங்கையிலும் இடம்பெறக்கூடும் என முன்னாள் அமைச்சர்...