24 661dd6bb34d97
இலங்கைசெய்திகள்

முக்கிய அரச நிறுவனங்களை விற்பனை செய்ய முயற்சி

Share

முக்கிய அரச நிறுவனங்களை விற்பனை செய்ய முயற்சி

நாட்டின் முக்கியமான அரச நிறுவனங்களை விற்பனை செய்வதற்கு அரசாங்கம் முயற்சித்து வருவதாக முன்னிலை சோசலிச கட்சி குற்றம் சுமத்தியுள்ளது.

கட்சியின் கல்விச் செயலளார் புபுது ஜாகொட இந்த குற்றச்சாட்டைச் முன்வைத்துள்ளார்.

புத்தாண்டில் அரசாங்கம் முதல் பணியாக அரச நிறுவனங்களை தனியாருக்கு விற்பனை செய்யும் அமைச்சரவை பத்திரமொன்றை சமர்ப்பிக்க உள்ளதாக தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கூறுகையில்…

புத்தாண்டுக்கு முன்னதாக நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் சில முக்கியமான தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளன.

இலங்கை மின்சாரசபையை பல துண்டுகளாக பிளவாக்கி வெளிநாட்டு நிறுவனங்களுக்கு விற்பைன செய்யும் யோசனைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

அரச வங்கிகளை விற்பனை செய்யவும், அரசாங்கத்திற்கு நெருக்கமானவர்களுக்கு சலுகைகளை வழங்கவும் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கி என்பன கூட்டாக இணைந்து அரச வங்கிகள் குறித்து எடுத்துள்ள தீர்மானத்தை அரசாங்கம் ஏற்றுக் கொண்டுள்ளது.

இலவச கல்வி முறைமையை இல்லாதொழிக்கும் நோக்கில் கொதலாவ பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் பணம் செலுத்தி மருத்துவ பட்டத்தைப் பெற்றுக்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

மக்களின் பிரதான சொத்துக்களில் ஒன்றான மின்சார வசதி, வங்கிக் கட்டமைப்பு மற்றும் இலவச கல்வி என்பனவற்றை கொள்ளையிட்டே அரசாங்கம் புத்தாண்டை ஆரம்பிக்கின்றது என புபுது ஜாகொட குற்றம் சுமத்தியுள்ளார்.

ஊடக சந்திப்பு ஒன்றில் பங்குபற்றி உரையாற்றிய போது அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
17509128871
சினிமாசெய்திகள்

12 வயதில் கண்ட கனவு… 72வது வயதில் நனவானது..! வெளியானது வைரமுத்துவின் புதிய முயற்சி!

கவிஞர் வைரமுத்து தனது ஆயுள் முழுக்க விரைந்து ஓடிய கனவுகளை, எழுத்து மூலம் உலகிற்கு அளித்து...

17509267851
சினிமாசெய்திகள்

“Code Word” எதற்காக? நடிகர் கிருஷ்ணாவின் ரகசிய மெசேஜ் விவகாரம் பொலீஸார் பிடியில்!

தமிழ் திரைத்துறையை அதிர்ச்சி அடையவைத்த போதைப்பொருள் வழக்குகள் தொடர்ச்சியாக சமூக வலைத்தளங்களில் பரவிக்கொண்டே இருக்கின்றன. சமீபத்தில்...

17509373351
சினிமாசெய்திகள்

போதைப்பொருள் விவகாரத்தில் நடிகர்களை கேள்விக்குள்ளாக்கிய மாரி செல்வராஜ்! வைரலான வீடியோ..

தமிழ் திரைப்பட உலகம், சமீப காலமாக போதைப்பொருள் தொடர்பான கடுமையான சிக்கல்களால் பெரும் அதிர்ச்சியிலும் பரபரப்பிலும்...

21 4
இலங்கைசெய்திகள்

கொழும்பு மாநகர சபை உறுப்பினர் மீதான தாக்குதல்! ஐக்கிய தேசிய கட்சி முன்வைத்துள்ள குற்றச்சாட்டு

கொழும்பு மாநகர சபை உறுப்பினர் சந்தமாலி உலுவிடகே மீது அண்மையில் நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பாக பொலிஸாரின்...