gota 3
அரசியல்இலங்கைசெய்திகள்

“கொலைகாரக் கோட்டா வீட்டுக்குப் போ” – மஹிந்தவின் இல்லச் சுவரில் பதிந்த வாசகம்

Share

பிரதமர் மஹிந்த ராஜபக்சவின் கொழும்பு விஜேராம மாவத்தை இல்லத்தின் சுவரில் போராட்டக்காரர்கள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, பிரதமர் மஹிந்த ராஜபக்ச ஆகியோருக்கு எதிரான வாசகங்களை எழுதி தங்களது எதிர்ப்புகளை வெளிப்படுத்தினர்.

அரசுக்கும் ஆட்சியாளர்களுக்கும் எதிராக அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் நேற்று கொழும்பு – கோட்டையில் ஆரம்பித்த பேரணி காலிமுகத்திடலுக்குச் செல்ல விடாமல் பொலிஸாரால் தடுப்புப் போட்டு மறிக்கப்பட்டது . அதையடுத்து மாணவர் ஒன்றியத்தினர் தங்கள் பேரணியின் பாதையைத் திடீரெனமாற்றினர். விஜேராம மாவத்தையில் உள்ள பிரதமர் மஹிந்த ராஜபக்சவின் உத்தியோகபூர்வ இல்லத்தை முற்றுகையிட்டனர்.

அங்கு போடப்பட்டிருந்த தடுப்புக்களை பேரணிகாரர்கள் உடைத்துக்கொண்டு முன்னேற முயன்றமையால், பதற்றமான நிலை ஏற்பட்டது.

பிரதமரின் இல்லத்தின் சுவரில் “கொலைகாரக் கோட்டா வீட்டுக்குப் போ”, “அன்று ரதுபஸ்வல; இன்று ரம்புக்கன”, “225 நாடாளுமன்ற உறுப்பினர்களும் வேண்டாம்” என்கின்ற வாசகங்களைப் போராட்டக்காரர்கள் சுவரில் எழுதினர்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Recent Posts

தொடர்புடையது
articles2Fka10y8tLGVxpVydY2Opn
செய்திகள்உலகம்

பிரித்தானிய நிதியமைச்சரின் வரவு செலவுத் திட்டம்: பங்குச் சந்தை முதலீட்டை ஊக்குவிக்கச் சேமிப்புக் கணக்கு வரம்பு குறைய வாய்ப்பு!

பிரித்தானிய நிதியமைச்சர் ரேச்சல் ரீவ்ஸ் (Rachel Reeves) நாளைய தினம் (நவம்பர் 26) தனது வருடாந்தர...

articles2FDa64TGfTKDPmX85aOKjK
உலகம்செய்திகள்

நைஜீரியாவில் கடத்தப்பட்ட மாணவர்கள்: அவர்களை விடுவிக்கப் பாப்பரசர் லியோ உருக்கமான வேண்டுகோள்!

நைஜீரியாவில் ஆயுதக் குழுக்களால் கடத்தப்பட்ட மாணவர்களை உடனடியாக விடுவிக்குமாறு பாப்பரசர் லியோ (Pope Leo) உருக்கமான...

24 66ce10fe42b0d
செய்திகள்இலங்கை

தமிழர்களுக்கு எதிராக வன்முறையைத் தூண்டும் வகையில் பேசிய அம்பிட்டிய சுமணரத்ன தேரரை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவு!

‘வடக்கில் உள்ள தமிழ் மக்களை தெற்கில் உள்ள மக்களே வெட்டிக் கொல்ல வேண்டும்’ என்று பொதுவெளியில்...

25 6925a9a6dc131
அரசியல்இலங்கைசெய்திகள்

நாடாளுமன்ற பெண் ஊழியர் மீதான பாலியல் அத்துமீறல் புகார்: ஓய்வுபெற்ற நீதிபதியின் அறிக்கையில் முக்கிய முடிவு!

நாடாளுமன்ற பெண் ஊழியர் ஒருவர் மீது பாலியல் அத்துமீறல் ஏதேனும் செய்யப்பட்டுள்ளதா என்பதை விசாரித்து அறிக்கை...