gota 3
அரசியல்இலங்கைசெய்திகள்

“கொலைகாரக் கோட்டா வீட்டுக்குப் போ” – மஹிந்தவின் இல்லச் சுவரில் பதிந்த வாசகம்

Share

பிரதமர் மஹிந்த ராஜபக்சவின் கொழும்பு விஜேராம மாவத்தை இல்லத்தின் சுவரில் போராட்டக்காரர்கள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, பிரதமர் மஹிந்த ராஜபக்ச ஆகியோருக்கு எதிரான வாசகங்களை எழுதி தங்களது எதிர்ப்புகளை வெளிப்படுத்தினர்.

அரசுக்கும் ஆட்சியாளர்களுக்கும் எதிராக அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் நேற்று கொழும்பு – கோட்டையில் ஆரம்பித்த பேரணி காலிமுகத்திடலுக்குச் செல்ல விடாமல் பொலிஸாரால் தடுப்புப் போட்டு மறிக்கப்பட்டது . அதையடுத்து மாணவர் ஒன்றியத்தினர் தங்கள் பேரணியின் பாதையைத் திடீரெனமாற்றினர். விஜேராம மாவத்தையில் உள்ள பிரதமர் மஹிந்த ராஜபக்சவின் உத்தியோகபூர்வ இல்லத்தை முற்றுகையிட்டனர்.

அங்கு போடப்பட்டிருந்த தடுப்புக்களை பேரணிகாரர்கள் உடைத்துக்கொண்டு முன்னேற முயன்றமையால், பதற்றமான நிலை ஏற்பட்டது.

பிரதமரின் இல்லத்தின் சுவரில் “கொலைகாரக் கோட்டா வீட்டுக்குப் போ”, “அன்று ரதுபஸ்வல; இன்று ரம்புக்கன”, “225 நாடாளுமன்ற உறுப்பினர்களும் வேண்டாம்” என்கின்ற வாசகங்களைப் போராட்டக்காரர்கள் சுவரில் எழுதினர்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
21 13
செய்திகள்இலங்கை

எரிபொருள் QR குறியீட்டிற்கான போலி இணையதளங்கள் குறித்து எச்சரிக்கை

அரசாங்கத்தின் அதிகாரபூர்வ எரிபொருள் QR குறியீட்டைப் பெறுவதற்கான இணையதளத்தைப் போன்று போலியாக வடிவமைக்கப்பட்ட இணையதளங்கள் குறித்து...

20 15
செய்திகள்உலகம்

ஈரானின் முக்கிய இலக்குகள் மீது தாக்குதல்: உச்ச தலைவர் பயன்படுத்திய விமானத்தை அழித்ததாக இஸ்ரேல் அறிவிப்பு

இஸ்ரேலிய இராணுவம் நேற்று இரவு தெஹ்ரானின் மெஹ்ராபாத் விமான நிலையத்தை இலக்கு வைத்து நடத்திய தாக்குதலில்,...

19 13
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பாடசாலைகளை மூடுவது அல்லது இணையவழி கற்றலுக்கு மாறுவது குறித்து கல்வி அமைச்சு அறிவிப்பு

நாட்டில் தற்போது மீண்டும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள QR குறியீட்டு முறைமையினால் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் வரிசைகள் நீண்டு...

18 14
செய்திகள்உலகம்

6 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் சீனா – வடகொரியா விமானச் சேவை: போக்குவரத்துத் துறையில் முக்கியத் திருப்பம்!

கொரோனா பெருந்தொற்று பரவல் காரணமாக, கடந்த 2020-ம் ஆண்டு முதல் சீனா மற்றும் வடகொரியா இடையிலான...