gota 3
அரசியல்இலங்கைசெய்திகள்

‘கோட்டா கோ கம’வில் தங்கியிருப்போர் உடன் வெளியேறுக! – ஒலிபெருக்கி மூலம் பொலிஸார் எச்சரிக்கை

Share

நாட்டில் பிறப்பிக்கப்பட்டுள்ள அவசரகாலச் சட்டம் மற்றும் ஊரடங்குச் சட்டம் ஆகியவற்றின் அடிப்படையில் கொழும்பு – காலிமுகத்திடல் ‘கோட்டா கோ கம’வில் கூடியிருக்கும் இளைஞர்களும், யுவதிகளும் தொடர்ந்தும் அங்கு தங்கியிருக்க முடியாது என்று பொலிஸார் ஒலிபெருக்கி மூலம் அறிவித்துள்ளனர்.

ஜனாதிபதி செயலகத்தின் கூரையில் ஒலிபெருக்கியைப் பொருத்தி இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.

சுமார் ஒரு மாத காலம் காலிமுகத்திடலில் போராட்டம் நடத்தி வரும் இளைஞர்களும், யுவதிகளும் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்னர் ஆளும் தரப்பின் குண்டர் குழுக்களின் தாக்குதலுக்கு இலக்காகி இருந்தனர்.

இதையடுத்து நாடு முழுவதும் அமைச்சர்களினதும், நாடாளுமன்ற உறுப்பினர்களதும் வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டதுடன் சொத்துக்களுக்கும் சேதம் விளைவிக்கப்பட்டது.

அதேநேரம் நாடு முழுவதும் தற்போதும் பதற்றமான, குழப்பமான சூழல் நீடித்து வருகின்றது. இந்நிலையிலேயே பொலிஸார் இவ்வாறு அறிவித்துள்ளனர்.

கடந்த 6ஆம் திகதி நள்ளிரவு முதல் பிறப்பிக்கப்பட்ட அவசரகாலச் சட்டம் மற்றும் கடந்த 9ஆம் திகதி மாலை 7 மணி முதல் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்குச் சட்டம் ஆகியவை அமுலில் இருக்கும் காலப்பகுதியில் எந்தவொரு நபரும் பொது இடங்களிலோ அல்லது பொது மைதானப் பகுதிகளிலோ கூடியிருப்பதற்குத் தடை விதிக்கப்படுகின்றது எனப் பொலிஸார் அறிவித்துள்ளனர்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Recent Posts

தொடர்புடையது
aswesuma
செய்திகள்இலங்கை

அஸ்வெசும திட்டத்தில் பயன்பெறுவோர் கவனத்திற்கு: வருடாந்த தகவல் புதுப்பிப்பு ஆரம்பம்; டிசம்பர் 10 கடைசித் தேதி!

அஸ்வெசும வருடாந்த தகவல் புதுப்பிப்பு தற்சமயம் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. 2023ஆம் ஆண்டில் அஸ்வெசுமவில் முதன் முறையாகப் பதிவுசெய்து...

anura sri lanka president
செய்திகள்அரசியல்இலங்கை

ஜனாதிபதியுடன் தமிழ், முஸ்லிம் கட்சித் தலைவர்கள் சந்திப்பு: ‘இனவாத வலைக்குள் நாடு சிக்காது’ – அநுரகுமார திசாநாயக்க உறுதி!

அனைத்து மத மற்றும் கலாசார அடையாளங்களையும் மதித்து, இந்த நாட்டின் ஒவ்வொரு பிரஜைக்கும் சுதந்திரமாக வாழ...

25 6921dea82dcb6
உலகம்செய்திகள்

வரி விதிப்பு வழக்கு: டொனால்ட் ட்ரம்ப் கடும் நெருக்கடியில் – உயர்நீதிமன்றத் தீர்ப்பை எதிர்நோக்கி அவசர நடவடிக்கை!

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நிர்வாகம், சர்வதேச வர்த்தக வரி விதிப்பு தொடர்பான ஒரு முக்கிய...

images 4
செய்திகள்அரசியல்இலங்கை

ஊடகப்படுகொலைகள், அடக்குமுறைகளுக்கு நீதி வேண்டும்” – பாராளுமன்றத்தில் துரைராசா ரவிகரன் வலியுறுத்தல்!

கடந்த போர்க்காலத்தில் இடம்பெற்ற ஊடகப்படுகொலைகள் உள்ளிட்ட ஊடக அடக்குமுறைகளுக்கு இந்த அரசாங்கம் நீதியைப் பெற்றுக் கொடுக்க...