அரசியல்இலங்கைசெய்திகள்

பதவி துறக்கும் யோசனை கோட்டாவுக்கு இல்லை! – பஸில் கருத்து

basil 2
Share

“இந்த நாட்டின் சிறந்த தலைவரே கோட்டாபய ராஜபக்ச. தற்போதைய நெருக்கடி நிலைமையிலிருந்து நாட்டை அவர் மீட்டே தீருவார். பதவி விலகும் எண்ணம் அவருக்கு இல்லை.”

– இவ்வாறு நிதி அமைச்சர் பஸில் ராஜபக்ச தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவைப் பதவி விலகுமாறு எதிர்க்கட்சிகளும், எதிர்க்கட்சிகளின் ஆதரவாளர்களுமே கோருகின்றனர். ஜனாதிபதிக்கு ஆணை வழங்கிய மக்கள் எவரும் அவரைப் பதவி விலகுமாறு கோரவில்லை.

இதேவேளை, ராஜபக்ச சகோதரர்களுக்குக் களங்கத்தை ஏற்படுத்தும் விதத்தில் சில ஊடகங்கள் செய்திகளை வெளியிடுகின்றன. அந்த ஊடகங்கள் பொறுப்புணர்வுடன் செயற்பட வேண்டும்.

உண்மைச் செய்திகளை வெளியிட்டால் அவற்றை நாம் வரவேற்போம். அதைவிடுத்துப் போலிச் செய்திகளை வெளியிட்டு மக்களைக் குழப்ப வேண்டாம்.

இந்த நாட்டை முன்னேற்ற ராஜபக்ச சகோதரர்கள் ஓரணியில் பயணிக்கின்றனர். எமது பயணம் வெற்றியடைய ஆளுந்தரப்பில் உள்ள அனைவரும் ஒத்துழைப்பு வழங்கி வருகின்றனர்” – என்றார்.

#SriLankaNews

 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Related Articles
25 3
இலங்கைசெய்திகள்

உள்ளூராட்சி மன்றங்களில் ஆட்சி அமைப்பது தொடர்பில் பேச்சுவார்த்தை

உள்ளூராட்சி மன்றங்களில் ஆட்சி அமைப்பது தொடர்பில் ஜனநாயக தமிழ் தேசியக் கூட்மைப்புடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளோம் என...

22 5
இலங்கைசெய்திகள்

யாழில் ஆலயத்திற்கு அழைத்து வரப்பட்ட யானை மிரண்டதால் இருவர் காயம்

யாழ்ப்பாணத்தில் உள்ள ஆலயம் ஒன்றிற்கு தென்னிலங்கையில் இருந்து அழைத்து வரப்பட்ட யானை மிரண்டதால் இருவர் காயமடைந்த...

21 6
இலங்கைசெய்திகள்

வடக்கு – கிழக்கில் காணிகளை அபகரிக்கும் வர்த்தமானியின் உள்நோக்கம் என்ன.. சிறீதரன் தெரிவிப்பு

வடக்கு – கிழக்கு மாகாணங்களில் உள்ள 5,700 ஏக்கருக்கும் அதிகமான தமிழர்களின் பூர்வீக நிலங்களைச் சுவீகரிப்பதற்காக...

24 4
இலங்கைசெய்திகள்

கொழும்பு மாநகர சபையை கைப்பற்ற பேரம் பேசும் அரசாங்கம்! நாடாளுமன்றில் பகிரங்க குற்றச்சாட்டு

கொழும்பு மாநகர சபையின் அதிகாரத்தை பெற்றுக்கொள்ள பல உறுப்பினர்களுடன் அரசு மில்லியன் கணக்கான ரூபா பேரம்...