8 14
இலங்கைசெய்திகள்

வாகனம் வாங்க காத்திருப்போருக்கு வெளியான தகவல்

Share

வாகனம் வாங்க காத்திருப்போருக்கு வெளியான தகவல்

வாகன இறக்குமதிச் செயற்பாட்டின் மூலம் நாட்டின் அந்நியச் செலாவணி கையிருப்பு பாதிக்கப்படாது என்று மத்திய வங்கியின் ஆளுனர் நந்தலால் வீரசிங்க (Nandalal Weerasinghe) உத்தரவாதமளித்துள்ளார்

தனியார் தொலைக்காட்சி அலைவரிசையில் ஔிபரப்பான நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு கருத்து வெளியிட்ட போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

குறித்த நிகழ்ச்சியில் தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், வாகன இறக்குமதிகள் நடைமுறைக்கணக்கு மீதியில் மிகச்சொற்பளவு பற்றாக்குறையைத் தோற்றுவித்தாலும், கடந்த காலங்களைப்போன்று மிகையான பற்றாக்குறையைத் தோற்றுவிக்காது.

கடன்மறுசீரமைப்பு செயன்முறை முழுமையாகப் பூர்த்தியடைந்ததன் பின்னர் வாகன இறக்குமதிகள் 1.5 பில்லியன் டொலர் வரை உயர்வடைந்தாலும், அரசாங்கத்தினால் கையிருப்பைப் பேணவும், அவசியமான மீள்செலுத்துகைகளை மேற்கொள்வதற்கும், அரச வருமானத்தை அதிகரித்துக்கொள்வதற்கும் முடியும்.

பணச்சுருக்கம் மற்றும் உயர் பெறுமதிசேர் வரி என்பவற்றின் விளைவாக இறக்குமதி செய்யப்படும் வாகனங்களின் புதிய பெறுமதி உயர்வடையக் கூடும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Share
தொடர்புடையது
MediaFile 21
செய்திகள்இலங்கை

யாழ்ப்பாணம் நாவாந்துறையில் 290 மில்லி கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் 5 சந்தேகநபர்கள் கைது!

யாழ்ப்பாணம் – நாவாந்துறைப் பகுதியில் நேற்றிரவு மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின்போது, ஐஸ் (Ice) போதைப்பொருளுடன் 5 சந்தேகநபர்கள்...

6.WhatsApp Image 2024 11 20 at 09.04.56
இலங்கைஅரசியல்செய்திகள்

மீனவர்களைப் பாதுகாப்போம், கடற்றொழில் துறையை நவீனமயமாக்குவோம்: அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் உறுதி!

இலங்கை மீனவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தீர்க்கப்பட்டு வருவதாகவும், அவர்களை நிச்சயம் பாதுகாப்பதாகவும் கடற்றொழில், நீரியல் மற்றும்...

qWa3tdNG
செய்திகள்உலகம்

ரேபிஸ் பரவுவதைத் தடுக்க ஜகார்த்தாவில் நாய், பூனை, வௌவால் இறைச்சிக்குத் தடை!

இந்தோனேசியத் தலைநகர் ஜகார்த்தாவில் ரேபிஸ் (Rabies) நோய் பரவுவதைத் தடுக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக, நாய்,...