7 15
இலங்கைசெய்திகள்

முன்னாள் சபாநாயகரின் கல்விச் சான்றிதழுக்காக காத்திருக்கும் அரசாங்கம்

Share

முன்னாள் சபாநாயகரின் கல்விச் சான்றிதழுக்காக காத்திருக்கும் அரசாங்கம

முன்னாள் சபாநாயகர் அசோக ரன்வல (ashoka rangwalla) தனது கல்விச் சான்றிதழ்களை வழங்குவதற்காக அரசாங்கம் காத்திருப்பதாக சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சர் வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸ (nalinda jayatissa) தெரிவித்துள்ளார்.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் முன்னாள் சபாநாயகரின் கல்விச் சான்றிதழ்கள் தொடர்பில் ஊடகவியலாளர் ஒருவர் கேட்ட கேள்விக்கு நேற்று (ஜன. 7) பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

முன்னாள் சபாநாயகரின் தகுதி குறித்து அவர் பதில் அளிப்பார். நாங்கள் காத்திருக்கிறோம். அவருக்கு தேவையான நேரத்தை கொடுக்க முடிவு செய்தோம்.

அந்த சான்றிதழ்கள் தேவைப்பட்டால் விரைவில் சமர்ப்பிக்கப்படும்” என்றார்.

அசோக ரன்வலவின் கலாநிதி பட்டம் நாட்டில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது, இதன் காரணமாக அவர் டிசம்பர் 13 அன்று சபாநாயகர் பதவியிலிருந்து விலகியமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...