யாழ் – சென்னை விமான பயணிகளுக்கு மகிழ்ச்சி தகவல்!

யாழ் - சென்னை விமான பயணிகளுக்கு மகிழ்ச்சி தகவல்!

யாழ் - சென்னை விமான பயணிகளுக்கு மகிழ்ச்சி தகவல்!

யாழ் – சென்னை விமான பயணிகளுக்கு மகிழ்ச்சி தகவல்!

யாழ்ப்பாணம் – சென்னை இடையில் இந்தியாவின் அலையன்ஸ் எயார் (Alliance Air) நிறுவனத்தின் நாளாந்த விமான சேவைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

குறித்த சேவையானது யாழ்ப்பாணம் – தமிழ்நாட்டு இடையிலான நாளாந்த விமான சேவைகளை அதிகரிக்கும் என்றும் வடக்கின் பொருளாதாரத்தை உயர்ந்தும் என்றும் இலங்கை விமான சேவைகள் நிறுவனம் தெரிவித்துள்ளது.

புதிய கால அட்டவணையின் ஒரு பகுதியாக இந்தியாவிலிருந்து விமானம் 11.30 மணியளவில் யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தை வந்தடையும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா தொற்றின் காரணமாக யாழ்ப்பாணத்திற்கான விமான சேவைகளை இடைநிறுத்திய அலையன்ஸ் எயார் நிறுவனம் கடந்த ஆண்டு டிசம்பரில் மீண்டும் சேவைகளை தொடங்கியது.

இதனைத்தொடர்ந்து 4 வாரங்களுக்கு ஒருமுறை என யாழ்ப்பாணத்திற்கும் தமிழ் நாட்டுக்கும் இடையில் சேவைகள் இடம்பெற்றன.

இதன்படி கடந்த ஜூன் மாதம் வரை, கொரியர் சேவை மூலம் சென்னை – யாழ்ப்பாணம் இடையே 12,000 க்கும் மேற்பட்ட பயணிகள் சென்றதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version