2 11
இலங்கைசெய்திகள்

ஈரான் எடுக்கபோகும் அதிரடி முடிவு! உலக நாடுகளுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

Share

ஹார்முஸ் வளைகுடா மூடப்பட்டால் எண்ணெய் மற்றும் எரிவாயு விலைகள் உயரக்கூடும் என்று கோல்ட்மேன் சாக்ஸ் வங்கி கடுமையான எச்சரிக்கையொன்றை விடுத்துள்ளது.

கோல்ட்மேன் சாக்ஸ் வங்கி நேற்றையதினம்(22) வெளியிட்ட அறிக்கையில் இந்த விடயம் தொடர்பில் குறிப்பிட்டுள்ளது.

அமெரிக்காவின் தாக்குதலை தொடர்ந்து ஈரான்(Iran) உலக கச்சா எண்ணெய் போக்குவரத்தின் முக்கிய பங்காக உள்ள ஹார்முஸ்(Hormuz) நீரிணையை மூட முடிவு செய்துள்ளது.

உலகம் முழுவதுக்குமான 20% கச்சா எண்ணெய் இந்த நீரிணை வழியேதான் பல்வேறு பகுதிகளுக்கு கப்பலில் கொண்டு செல்லப்படுகின்றது. இது உலகின் மிக முக்கியமான எரிசக்தி வழித்தடங்களில் ஒன்றாகும்.

இந்தநிலையில் ஹார்முஸ் வளைகுடா மூடப்பட்டால் எண்ணெய் போக்குவரத்து ஒரு மாதத்திற்கு 50 சதவீதம் குறைந்து, பின்னர் 11 மாதங்களுக்கு 10 சதவீதம் குறைவாகவே தொடர்ந்தால், Brent crude எண்ணெய் விலை 110 டொலர் வரை உயரும்.

2025 ஆம் ஆண்டு 4ஆம் காலாண்டில் சராசரியாக 95 டொலராக நிலைத்திருக்கும் எனக் கோல்ட்மேன் கணித்துள்ளது.

Polymarket எனும் கணிப்பு சந்தை தரவின்படி, ஹார்முஸ் வளைகுடாவை ஈரான் மூட வாய்ப்பு 52சதவீதம் வாய்ப்புள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது.

ஈரான் பாராளுமன்றம் அந்த முடிவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளதாகவும், இறுதியான முடிவை ஈரான் தேசிய பாதுகாப்பு மன்றம் எடுக்கும் என சர்வதேச ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

ஈரான், தினமும் 1.75 மில்லியன் பரல்கள் அளவுக்கு எண்ணெய் வழங்குவதை நிறுத்தினால், 6 மாதங்களில் பிரென்ட் எண்ணெய் விலை பரலுக்கு 90 டொலர் வரை உயரக்கூடும்.

பின்னர், 2026ல் 60டொலர் அளவுக்கு வீழும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது.

மேலும், ஈரான் எண்ணெய் வழங்கல் தொடர்ந்து பாதிக்கப்பட்டால், விலை 90டொலராக உயர்ந்து, பின்னர் 70டொலர் – 80டொலராக நிலைத்திருக்கும்.

ஐரோப்பிய சந்தைகளில், TTF எரிவாயு விலை 74 யூரோ/மெகாவாட்-மணிக்கு ($25/MMBtu) வரை உயரலாம் என கோல்ட்மேன் கணித்துள்ளது.

அரசியல் குழப்பங்கள் தொடர்ந்து பெருகும் நிலையில், முதலீட்டாளர்கள் இந்த உலகளாவிய சந்தை நிலவரங்களுக்கு தயாராக இருக்க வேண்டும் என்று கோல்ட்மேன் சாக்ஸ் வங்கி எச்சரித்துள்ளது.

Share
தொடர்புடையது
22 2
இலங்கைசெய்திகள்

ஐக்கிய நாடுகளின் பட்டிலில் இந்தியாவை முந்திய இலங்கை

ஐக்கிய நாடுகள் சபையின் நிலையான வளர்ச்சிக்கான இலக்குகள் பட்டியலில், இலங்கைக்கு 93வது இடம் கிடைத்துள்ளது. வறுமை...

21 2
இலங்கைசெய்திகள்

இருநூறு உள்ளூராட்சி மன்றங்களின் அதிகாரத்தைக் கைப்பற்றிய அரசாங்கம்

நாடு தழுவிய ரீதியில் 200 உள்ளூராட்சி மன்றங்களின் அதிகாரத்தை தேசிய மக்கள் சக்தி தலைமையிலான அரசாங்கம்...

20 1
செய்திகள்பொழுதுபோக்கு

இறுதி நாளில் இந்தியாவை வீழ்த்திய இங்கிலாந்து

சுற்றுலா இந்திய அணிக்கும் இங்கிலாந்து அணிக்கும் இடையிலான முதலாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி...

Untitled 1 Recovered Recovered Recovered Recovered 3
இலங்கைசெய்திகள்

முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு

ஜனாதிபதி செயலகத்தின் வாகனங்களை மோசடியாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டின் கீழ் முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவுக்கு எதிரான...