2 11
இலங்கைசெய்திகள்

ஈரான் எடுக்கபோகும் அதிரடி முடிவு! உலக நாடுகளுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

Share

ஹார்முஸ் வளைகுடா மூடப்பட்டால் எண்ணெய் மற்றும் எரிவாயு விலைகள் உயரக்கூடும் என்று கோல்ட்மேன் சாக்ஸ் வங்கி கடுமையான எச்சரிக்கையொன்றை விடுத்துள்ளது.

கோல்ட்மேன் சாக்ஸ் வங்கி நேற்றையதினம்(22) வெளியிட்ட அறிக்கையில் இந்த விடயம் தொடர்பில் குறிப்பிட்டுள்ளது.

அமெரிக்காவின் தாக்குதலை தொடர்ந்து ஈரான்(Iran) உலக கச்சா எண்ணெய் போக்குவரத்தின் முக்கிய பங்காக உள்ள ஹார்முஸ்(Hormuz) நீரிணையை மூட முடிவு செய்துள்ளது.

உலகம் முழுவதுக்குமான 20% கச்சா எண்ணெய் இந்த நீரிணை வழியேதான் பல்வேறு பகுதிகளுக்கு கப்பலில் கொண்டு செல்லப்படுகின்றது. இது உலகின் மிக முக்கியமான எரிசக்தி வழித்தடங்களில் ஒன்றாகும்.

இந்தநிலையில் ஹார்முஸ் வளைகுடா மூடப்பட்டால் எண்ணெய் போக்குவரத்து ஒரு மாதத்திற்கு 50 சதவீதம் குறைந்து, பின்னர் 11 மாதங்களுக்கு 10 சதவீதம் குறைவாகவே தொடர்ந்தால், Brent crude எண்ணெய் விலை 110 டொலர் வரை உயரும்.

2025 ஆம் ஆண்டு 4ஆம் காலாண்டில் சராசரியாக 95 டொலராக நிலைத்திருக்கும் எனக் கோல்ட்மேன் கணித்துள்ளது.

Polymarket எனும் கணிப்பு சந்தை தரவின்படி, ஹார்முஸ் வளைகுடாவை ஈரான் மூட வாய்ப்பு 52சதவீதம் வாய்ப்புள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது.

ஈரான் பாராளுமன்றம் அந்த முடிவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளதாகவும், இறுதியான முடிவை ஈரான் தேசிய பாதுகாப்பு மன்றம் எடுக்கும் என சர்வதேச ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

ஈரான், தினமும் 1.75 மில்லியன் பரல்கள் அளவுக்கு எண்ணெய் வழங்குவதை நிறுத்தினால், 6 மாதங்களில் பிரென்ட் எண்ணெய் விலை பரலுக்கு 90 டொலர் வரை உயரக்கூடும்.

பின்னர், 2026ல் 60டொலர் அளவுக்கு வீழும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது.

மேலும், ஈரான் எண்ணெய் வழங்கல் தொடர்ந்து பாதிக்கப்பட்டால், விலை 90டொலராக உயர்ந்து, பின்னர் 70டொலர் – 80டொலராக நிலைத்திருக்கும்.

ஐரோப்பிய சந்தைகளில், TTF எரிவாயு விலை 74 யூரோ/மெகாவாட்-மணிக்கு ($25/MMBtu) வரை உயரலாம் என கோல்ட்மேன் கணித்துள்ளது.

அரசியல் குழப்பங்கள் தொடர்ந்து பெருகும் நிலையில், முதலீட்டாளர்கள் இந்த உலகளாவிய சந்தை நிலவரங்களுக்கு தயாராக இருக்க வேண்டும் என்று கோல்ட்மேன் சாக்ஸ் வங்கி எச்சரித்துள்ளது.

Share

Recent Posts

தொடர்புடையது
images 2 3
செய்திகள்விளையாட்டு

டி20 உலகக் கிண்ணம்: பாகிஸ்தானை துவம்சம் செய்த இந்தியா! – 61 ஓட்டங்களால் அபார வெற்றி!

டி20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் 27-ஆவது லீக் போட்டியில், பரம எதிரிகளான இந்தியா மற்றும்...

25 688daecf5398b
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையில் நாளை நீதிமன்றப் பணிகள் முடக்கம்! – சட்டத்தரணி படுகொலைக்கு எதிர்ப்புத் தெரிவித்து நாடளாவிய ரீதியில் பணிப்பகிஷ்கரிப்பு!

பத்தரமுல்ல, அக்குரேகொட பகுதியில் இடம்பெற்ற திட்டமிட்ட துப்பாக்கிச் சூட்டில் சட்டத்தரணி ஒருவரும் அவரது மனைவியும் படுகொலை...

Screenshot 2026 02 15 222008
செய்திகள்இலங்கைபிராந்தியம்

சிறுவர் துஷ்பிரயோகக் குற்றவாளிகளுக்குத் தடை! – புதிய தரவுத்தளம் மூலம் அரசாங்கம் அதிரடி நடவடிக்கை!

சிறுவர் துஷ்பிரயோகக் குற்றங்களுடன் தொடர்புடையவர்கள், சிறுவர்களுடன் நேரடியாகத் தொடர்புடைய எந்தவொரு பணிகளிலும் ஈடுபடுவதைத் தடுப்பதற்கான புதிய...

Screenshot 2026 02 15 222512
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையில் முதல்முறை: காசல் வீதி மருத்துவமனையில் இலவச IVF சிகிச்சை! – 2,000-க்கும் மேற்பட்ட தம்பதியினர் விண்ணப்பம்!

கொழும்பு காசல் வீதி மகளிர் மருத்துவமனையில் அறிமுகப்படுத்தப்படவுள்ள முற்றுமுழுதான இலவச செயற்கை கருத்தரிப்பு (IVF) சிகிச்சைக்காக...