கட்டுநாயக்கவில் மோசமான செயலில் ஈடுபட்ட இளம் பெண்
இலங்கைசெய்திகள்

கட்டுநாயக்கவில் மோசமான செயலில் ஈடுபட்ட இளம் பெண்

Share

கட்டுநாயக்கவில் மோசமான செயலில் ஈடுபட்ட இளம் பெண்

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் சட்டவிரோதமான முறையில் பெண் ஒருவரால் எடுத்துச் செல்ல முயன்ற 05 கிலோ எடையுள்ள ஜெல் வடிவ 04 தங்க பொதிகளை விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.

விமான நிலையத்தில் உள்ள வரியில்லா வணிக நிலையம்(duty-free shopping) ஒன்றில் பணிப்புரியும் 24 வயதுடைய பெண் ஒருவரை சந்தேகத்தின் பேரில் நேற்றைய தினம்(04.07.2023) சோதனையிட்டபோதே குறித்த தங்க பொதிகள் மீட்கப்பட்டதாக விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பில் விமான நிலைய பாதுகாப்பு அதிகாரி ஒருவர் தெரிவிக்கையில்,

விமான நிலையத்தில் உள்ள வரியில்லா வணிக நிலையம் ஒன்றில் பணிப்புரியும் 24 வயதுடைய பெண் நேற்று காலை விமான நிலைய வளாகத்தில் இருந்து சட்ட விரோத தங்க பொதிகளை எடுத்து செல்ல முயற்சித்துள்ளார்.

இந்த யுவதி கட்டுநாயக்க விமான நிலைய வரியில்லா வணிக நிலையத்தில், அழகு சாதனப் பொருட்கள் விற்பனை செய்யும் கடையில் பணிபுரிகிறார்.

இந்நிலையில் அவரின் செயற்பாடு குறித்து சந்தேகம் எழுந்ததோடு அவரின் செயற்பாடுகளை சிசிடிவி கருவி மூலம் பார்வையிட ஆரம்பித்தோம்.

அவர் நேற்று காலை 08.45 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து வெளியே செல்ல முயற்சித்த போது, 05 கிலோவிற்கும் அதிகமான தங்க ஜெல் அடங்கிய 04 பொதிகளை தனது ஆடைக்குள் மறைத்து வைத்துள்ளார்.

இவரின் செயல்கள் தொடர்பில் எழுந்த சந்தேகத்தில் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போதே குறித்த சட்டவிரோத தங்கம் கைப்பற்றப்பட்டுள்ளது.” என தெரிவித்தார்.

கைது செய்யப்பட்ட பெண் மற்றும் சட்டவிரோத தங்க பொதிகளை சுங்க அதிகாரிகளிடம் ஒப்படைத்ததோடு மேலதிக விசாரணைகளை சுங்க அதிகாரிகள் மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...