11 16
இலங்கைசெய்திகள்

இலங்கையில் 4 இலட்சத்தை எட்டியது தங்கத்தின் விலை: அதிர்ச்சியில் மக்கள்

Share

உலக சந்தையில் தங்கத்தின் விலை இன்று கணிசமாக அதிகரித்த நிலையில் கொழும்பு – செட்டியார் தெரு நிலவரப்படி இன்று தங்கத்தின் விலையானது 4 இலட்சத்தை அடைந்துள்ளது.

சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை 4,233 அமெரிக்க டொலரை அடைந்துள்ளமையினால் இவ்வாறு தங்கம் விலையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.

உலக சந்தையில் தங்கத்தின் விலை இன்று கணிசமாக அதிகரித்து வரலாற்றில் இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ளது.

இதற்கமைய, ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை இன்று (16) 4,233 அமெரிக்க டொலர்களாக பதிவாகியுள்ளது.

கடந்த மாத தொடக்கத்தில் இருந்து தங்கத்தின் விலை வேகமாக அதிகரித்து வரும் நிலையில், இந்த ஆண்டின் தொடக்கத்தில், ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 2,640 அமெரிக்க டொலர்களாக பதிவாகியுள்ளது.

இதற்கமைய, இலங்கையிலும் தங்கத்தின் விலை கணிசமாக அதிகரித்துள்ளது.

கடந்த வியாழக்கிழமையுடன் ஒப்பிடும்போது இன்று இலங்கையில் தங்கத்தின் விலை ரூ. 60,000 அதிகரித்துள்ளதாக சந்தை தரவுகள் தெரிவிக்கின்றன.

அதன்படி, இன்று காலை (16), கொழும்பில் ஹெட்டி தெரு தங்க சந்தையில் “22 கரட்” தங்கத்தின் ஒரு பவுண் ரூ. 10,000 அதிகரித்து, புதிய விலை ரூ. 360,800 இற்க விற்பனை செய்யப்படுகின்றது.

கடந்த வியாழக்கிழமை, ரூ. 305,300 ஆக விற்பனை செய்யப்பட்டுள்ளது. இதற்கிடையில், கடந்த வியாழக்கிழமை ரூ. 330,000 ஆக இருந்த “24 கரட்” தங்கத்தின் ஒரு பவுண் விலை இப்போது ரூ. 390,000 ஆக உயர்ந்துள்ளதாக கொழும்பு தங்க சந்தையின் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

 

Share
தொடர்புடையது
25 68f5c4968ea01
செய்திகள்இலங்கை

வெள்ள அபாய எச்சரிக்கை: பல வான்கதவுகள் திறப்பு!

மஹா ஓயா மற்றும் தெதுரு ஓயா படுகைப் பகுதிகளில் பெய்து வரும் பலத்த மழையைக் கருத்தில்...

image 95f229676a
செய்திகள்உலகம்

கரீபியன் கடலில் போதைப்பொருள் கடத்தல் முறியடிப்பு: அமெரிக்கப் படைகள் நீர்மூழ்கிக் கப்பலைத் தகர்த்தன!

லத்தீன் அமெரிக்க நாடுகளில் இருந்து கரீபியன் கடல் வழியாக அமெரிக்காவிற்கு அதிவிரைவு படகுகள் மூலம் போதைப்...

1752485228 GovyPay 6
செய்திகள்இலங்கை

போக்குவரத்து அபராதங்களை GovPay மூலம் செலுத்தலாம்: இலங்கை பொலிஸ் அறிவிப்பு

இலங்கைப் பொலிஸ் இன்று (அக்டோபர் 20) அறிவித்துள்ளதன் படி, தென் மாகாணத்தில் உள்ள வாகன ஓட்டுநர்கள்,...

image 7efc8d34a7
செய்திகள்இலங்கை

வவுனியாவில் பாரிய போதைப்பொருள் கைப்பற்றல்: 3.59 லட்சம் மாத்திரைகளுடன் இளைஞர் கைது!

வவுனியாவில், போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட சந்தேகத்தின் பேரில், மூன்று லட்சத்து 59 ஆயிரம் போதை மாத்திரைகளுடன்...