image 1000x630 1
இலங்கைபிராந்தியம்

தனிநபர் தரவு பாதுகாப்பு திருத்தச் சட்டம் ஒக்டோபர் 21 அன்று நாடாளுமன்றில் அங்கீகாரத்திற்காக சமர்ப்பிப்பு

Share

குழுநிலையில் திருத்தங்களுடன் கூடிய தனிநபர் தரவு பாதுகாப்பு திருத்தச் சட்டம், எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 21 ஆம் திகதி நாடாளுமன்ற அங்கீகாரத்திற்காக சமர்ப்பிக்கப்படவுள்ளதாக டிஜிட்டல் பொருளாதார அமைச்சு இன்று (அக்டோபர் 17) அறிக்கை ஒன்றை வெளியிட்டுத் தெரிவித்துள்ளது.

அமைச்சரவையின் அங்கீகாரத்துடன், தனிநபர் தரவு பாதுகாப்புச் சட்டத்தைத் திருத்தும் சட்டமூலம், 2025 ஜூன் மாதம் 03 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் இரண்டாவது வாசிப்பு விவாதத்தில் நிறைவேற்றப்பட்டது.

டிஜிட்டல் பொருளாதார அமைச்சின் வேண்டுகோளின் பேரில், சட்டவரைஞர் திணைக்களம், சட்டமா அதிபர் திணைக்களத்துடன் கலந்தாலோசித்து, குழுநிலையில் முன்மொழியப்பட வேண்டிய பல சிறிய திருத்தங்களை அடையாளம் கண்டுள்ளது.

அதன்படி, அமைச்சரவையால் அங்கீகரிக்கப்பட்ட இந்தத் திருத்தங்கள், ஒக்டோபர் 21 ஆம் திகதி எந்த விவாதமும் இன்றி குழுநிலையின்போது நாடாளுமன்றத்தால் அங்கீகரிக்கப்பட்டதன் பின்னர், சட்டமூலம் மூன்றாவது முறையாக வாசிக்கப்பட்டு அதே நாளில் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்படும் என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Share
தொடர்புடையது
army are
இலங்கை

போதைப்பொருளுடன் கைதான முன்னாள் ராணுவ சிப்பாய்.

கம்பஹா மாவட்டம், கந்தானை பிரதேசத்தில் 120 கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் மகரை பிரதேசத்தை சேர்ந்த 56...

body 2
இலங்கை

மூன்று பிள்ளைகளின் தந்தை மூன்று நாட்களின் பின் சடலமாக மீட்பு.

மொனராகலை மாவட்டம், படல்கும்புரை பிரதேசத்தில் வீட்டிலிருந்து வெளியே சென்ற நிலையில் காணாமல்போயிருந்த குடும்பஸ்தர் ஒருவர், மூன்று...

acdent 19
இலங்கை

இளைஞர்களின் உயிரைக்குடித்த வேகம்.

  இன்று அதிகாலை சுமார் 2.30 மணியளவில் ஹொரணை – மொரகஹஹேன வீதியில் இடம்பெற்ற விபத்தில்...

fire 19
இலங்கை

அதிகரித்துள்ள வெப்பத்திற்கு மத்தியில் இரத்மலானை குடியிருப்பு வளாகமொன்றில் தீ பரவல்.

இரத்மலானை பொருளாதார மத்திய நிலையத்துக்கு அருகிலுள்ள குடியிருப்பு வளாகமொன்றில் இன்று தீப்பரவல் ஏற்பட்டுள்ளதாக தகவல் கிடைத்ததைத்...