11 16
இலங்கைசெய்திகள்

இலங்கையில் 4 இலட்சத்தை எட்டியது தங்கத்தின் விலை: அதிர்ச்சியில் மக்கள்

Share

உலக சந்தையில் தங்கத்தின் விலை இன்று கணிசமாக அதிகரித்த நிலையில் கொழும்பு – செட்டியார் தெரு நிலவரப்படி இன்று தங்கத்தின் விலையானது 4 இலட்சத்தை அடைந்துள்ளது.

சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை 4,233 அமெரிக்க டொலரை அடைந்துள்ளமையினால் இவ்வாறு தங்கம் விலையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.

உலக சந்தையில் தங்கத்தின் விலை இன்று கணிசமாக அதிகரித்து வரலாற்றில் இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ளது.

இதற்கமைய, ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை இன்று (16) 4,233 அமெரிக்க டொலர்களாக பதிவாகியுள்ளது.

கடந்த மாத தொடக்கத்தில் இருந்து தங்கத்தின் விலை வேகமாக அதிகரித்து வரும் நிலையில், இந்த ஆண்டின் தொடக்கத்தில், ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 2,640 அமெரிக்க டொலர்களாக பதிவாகியுள்ளது.

இதற்கமைய, இலங்கையிலும் தங்கத்தின் விலை கணிசமாக அதிகரித்துள்ளது.

கடந்த வியாழக்கிழமையுடன் ஒப்பிடும்போது இன்று இலங்கையில் தங்கத்தின் விலை ரூ. 60,000 அதிகரித்துள்ளதாக சந்தை தரவுகள் தெரிவிக்கின்றன.

அதன்படி, இன்று காலை (16), கொழும்பில் ஹெட்டி தெரு தங்க சந்தையில் “22 கரட்” தங்கத்தின் ஒரு பவுண் ரூ. 10,000 அதிகரித்து, புதிய விலை ரூ. 360,800 இற்க விற்பனை செய்யப்படுகின்றது.

கடந்த வியாழக்கிழமை, ரூ. 305,300 ஆக விற்பனை செய்யப்பட்டுள்ளது. இதற்கிடையில், கடந்த வியாழக்கிழமை ரூ. 330,000 ஆக இருந்த “24 கரட்” தங்கத்தின் ஒரு பவுண் விலை இப்போது ரூ. 390,000 ஆக உயர்ந்துள்ளதாக கொழும்பு தங்க சந்தையின் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

 

Share
தொடர்புடையது
image f1250cea24
அரசியல்இலங்கைசெய்திகள்

பூஸா சிறையில் அதிரடிச் சோதனை: 2 ஸ்மார்ட் போன்கள், 13 சிம் கார்டுகள் பறிமுதல்!

பூஸா உயர் பாதுகாப்புச் சிறைச்சாலையில் மேற்கொள்ளப்பட்ட அதிரடிச் சோதனையின்போது 2 ஸ்மார்ட் தொலைபேசிகள், 13 சிம்...

FB IMG 1764904684113 large
அரசியல்இலங்கைசெய்திகள்

அனர்த்த நிவாரணத்தில் பாரபட்சமா? உள்நாட்டுப் பகுதிகளுக்கு உதவிகள் தாமதம் – மக்கள் வேதனை!

நாட்டில் அண்மையில் ஏற்பட்ட இயற்கை அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களுக்கு ஆளும், எதிர்க்கட்சி உறுப்பினர்கள், தொண்டு நிறுவனங்கள்...

images 10 1
இலங்கைசெய்திகள்

கொழும்பில் இடி மின்னலுடன் கனமழை: வீதிகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது!

கொழும்பில் இன்று இரவு திடீரென இடி மின்னலுடன் கூடிய பெருமழை கொட்டிப் பெய்கிறது. சுமார் அரை...

articles2FTC207I0V0Mwrh6Fetrpk
இலங்கைசெய்திகள்

டிட்வா புயல் நிவாரணம்: வயல் நிலங்களில் படிந்த மணலை அகற்ற மகாவலி சபை அனுமதி! 

‘டிட்வா’ சூறாவளியுடன் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு நிலைமையினால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட வயல்நிலங்களில் குவிந்துள்ள மணல் மற்றும் மணல்...