16 5
இலங்கைசெய்திகள்

தங்கத்தின் சடுதியான விலை அதிகரிப்பு தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள தகவல்

Share

சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை அதிகரித்து வருவதால் தங்களுக்கு சிரமமாக இருப்பதாக அகில இலங்கை நகை வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

இதனால் தங்கத்தின் மீது விதிக்கப்பட்டுள்ள வரியை நீக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த விவகாரம் தொடர்பாக அரசாங்கத்துடன் கலந்துரையாடல் நடத்த சங்கம் முடிவு செய்துள்ளது.

வரலாற்றில் முதல் முறையாக, உலக சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை நேற்று 4,000 டொலரை தாண்டியது.

உலக பொருளாதார சூழ்நிலை மற்றும் அரசியல் சூழ்நிலையில் ஏற்பட்ட நிலையற்ற தன்மையே இந்த விலை உயர்வுக்கு வழிவகுத்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

அதற்கமைய, நாட்டில் தங்கத்தின் விலையும் அதிகரித்துள்ளது, மேலும் 24 காரட் தங்கத்தின் ஒரு பவுணின் விலை தற்போது 327,000 ரூபாயாக அதிகரித்துள்ளது.

மேலும், 22 காரட் தங்கத்தின் ஒரு பவுணின் விலை 300,000 ரூபாவாக உயர்ந்துள்ளதாக அகில இலங்கை நகை வியாபாரிகள் சங்கத்தின் தலைவர் ரத்னராஜா சரவணன் தெரிவித்தார்.

Share
தொடர்புடையது
25 2
இலங்கைசெய்திகள்

மகிந்த ராஜபக்ச தூக்கிலிடப்பட வேண்டும்! விமல் பரபரப்பு கருத்து

முன்னாள் இராணுவ தளபதி பீல்ட் மார்ஷல் சரத் போன்சேகா கூறுவது போன்று முன்னாள் ஜனாதிபதி மகிந்த...

24 2
இலங்கைசெய்திகள்

திருமணத்திற்கு பணம் திரட்டுவதற்காக இளைஞர்கள் செய்த மோசமான செயல்

கொழும்பின் புறநகர் பகுதியிலுள்ள பழங்கால விகாரையில் புரதான பித்தளை விளக்கை திருடிய குற்றச்சாட்டில் 3 பேர்...

21 2
இலங்கைசெய்திகள்

நாட்டை மீட்க அர்ப்பணிப்பான சர்வதிகாரி தேவை : வலியுறுத்தும் சரத் பொன்சேகா

இலங்கையை மீட்பதற்கு, நாட்டை நேசிக்கக்கூடிய – அர்ப்பணிப்பான சர்வாதிகாரி அவசியம் என்று முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும்...

23 2
இலங்கைசெய்திகள்

க.பொ.த சாதாரண தர மாணவர்களுக்கான விசேட அறிவிப்பு

2024 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சையின் மீள்பரிசீலனை முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது....