22 2
இலங்கைசெய்திகள்

ஆளும் கட்சிக்கு எதிரான வழக்கு! யாரும் எதிர்ப்பார்க்காத நீதிபதியின் முடிவு

Share

கம்பஹா, யக்கலையில் அமைந்துள்ள முன்னிலை சோசலிசக் கட்சியின் அலுவலகமொன்றை ஜே.வி.பி.யினர் அபகரித்த விவகாரம் தொடர்பான வழக்கு விசாரணையில் இருந்து கம்பஹா நீதவான் விலகிக் கொண்டுள்ளார்.

கம்பஹா மாவட்டத்தின் யக்கலை பிரதேசத்தில் முன்னிலை சோசலிசக் கட்சியின் அலுவலகமொன்று அமைந்திருந்தது. குறித்த அலுவலகத்தை பிரதியமைச்சர் மகிந்த ஜயசிங்க தலைமையிலான குழுவொன்று சில வாரங்களுக்கு முன்னர் கைப்பற்றிக் கொண்டிருந்தது.

அதற்கு எதிராக கம்பஹா இரண்டாம் இலக்க மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் முன்னிலை சோசலிசக்கட்சி தொடர்ந்த வழக்கின் பிரகாரம், ஜே.வி.பி.யினரை அங்கிருந்து வெளியேறுமாறும், அலுவலகத்தை மீண்டும் முன்னிலை சோசலிசக் கட்சியிடம் ஒப்படைக்குமாறும் இடைக்கால உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.

குறித்த வழக்கு தொடர்பான ஆட்சேபங்களை முன்வைக்க ஜே.வி.பி.தரப்புக்கு நேற்று வரை அவகாசம் வழங்கப்பட்டிருந்த நிலையில், அதற்கான பிறிதொருதினத்தை வழங்குமாறு அவர்கள் கோரிக்கையொன்றை முன்வைத்திருந்தனர்.

அதன் பிரகாரம் எதிர்வரும் 21ஆம் திகதி வரை ஜே.வி.பி தரப்புக்கு தமது ஆட்சேபங்களை முன்வைக்க அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே குறித்த வழக்கின் விசாரணையில் இருந்து கம்பஹா இரண்டாம் இலக்க மஜிஸ்திரேட் நீதவான் தனிப்பட்ட காரணங்களுக்காக விலகிக்கொண்டுள்ளார்.

அதன் காரணமாக குறித்த வழக்கு இனிவரும்காலங்களில் கம்பஹா முதலாம் இலக்க மஜிஸ்திரேட் நீதவான் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.

Share
தொடர்புடையது
india 17
உலகம்செய்திகள்

பாகிஸ்தான் ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் பயணித்த அனைவரும் பலி

பாகிஸ்தான் ராணுவத்திற்குச் சொந்தமான ‘Mi-17’ ரக ஹெலிகாப்டர் ஒன்று, பாகிஸ்தான் நிர்வாகத்தின் கீழுள்ள காஷ்மீரின் முசாபராபாத்...

india 16
உலகம்செய்திகள்

சூரியப் புயல்களில் இருந்து பூமியைப் பாதுகாக்க விண்வெளியில் செயற்கை பிளாஸ்மா கவசம்: விஞ்ஞானிகள் புதிய திட்டம்

சூரியனில் இருந்து வெளியாகும் சக்திவாய்ந்த சூரியப் புயல்கள் (Solar Storms) மற்றும் புவிக்காந்தப் புயல்களினால் பூமியில்...

india 15
உலகம்செய்திகள்

போலி உரிமம் மூலம் 17 ஆண்டுகள் பயணிகள் விமானத்தை இயக்கிய ஏர் கனடா கேப்டன் கைது

ஏர் கனடா (Air Canada) விமான சேவை நிறுவனத்தில் போலி உரிம ஆவணங்களைப் பயன்படுத்தி, சுமார்...

india 13
அரசியல்இலங்கைசெய்திகள்

சர்ச்சைக்குரிய மரணங்கள் மற்றும் குற்றச்சாட்டுகள் குறித்து முறையான விசாரணை: நாடாளுமன்றத்தில் அமைச்சர் ஆனந்த விஜேபால உறுதி

கடந்த காலங்களில் நாட்டில் இடம்பெற்ற சர்ச்சைக்குரிய மரணங்கள் மற்றும் மக்கள் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவங்கள் உள்ளிட்ட...