12 7
இலங்கைசெய்திகள்

சுனாமியில் காணாமல் போன மகளை AI தொழில்நுட்பத்தின் மூலம் தேடும் குடும்பம்

Share

சுனாமியில் காணாமல் போன மகளை AI தொழில்நுட்பத்தின் மூலம் தேடும் குடும்பம்

சுனாமியில் காணாமல் போன பெண்னை AI தொழில்நுட்பத்தின் மூலம் கண்டுபிடிக்கும் நடவடிக்கையை குடும்பத்தினர் மேற்கொண்டுள்ளனர்.

20 ஆண்டுகளுக்கு முன் ஏற்பட்ட சுனாமி பேரிடரில், ரயில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் அதில் பயணித்த கிருலப்பனை பிரதேசத்தை சேர்ந்த குடும்பத்தின் இளைய மகள் காணாமல் போயிருந்தார்.

அவரைக் கண்டுபிடிக்கும் வகையில், AI தொழில்நுட்பத்தின் மூலம் அவரது தற்போதைய வடிவத்தை கொண்ட புகைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.

சுனாமி இடம்பெற்ற தினத்தன்று ஒன்பது பேர் கொண்ட குடும்பத்துடன் 6 வயதான ஹிருணி தருஷிகா என்ற சிறுமி, ஹிக்கடுவவிற்கு சுற்றுலா சென்றுள்ளார்.

அனர்த்தத்தின் போது இன்னுமொரு சிறுமி உயிரிழந்த நிலையில், ஹிருணியை கண்டுபிடிக்க முடிவில்லை. அவர் இன்னும் உயிருடன் இருப்பதாக குடும்பம் நம்பிக்கை கொண்டுள்ளது.

இந்நிலையில் ஹிருணியை கண்டுபிடிக்கும் தீவிர முயற்சியில் அவரது தாயும் மூத்த சகோதரியும் அவரை கண்டுபிடிக்க பெரும் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

அதற்கமைய, தற்போது இவரின் வடிவமாக கருதப்படும் AIதொழில்நுட்பத்தின் மூலம் தயாரிக்கப்பட்ட புகைப்படங்கள் பேஸ்புக்கில் பகிரப்பட்டுள்ளது.

மகள் தொடர்பில் ஏதேனும் தகவல் தெரிந்தால், 0711856162 அல்லது 0112515961 என்ற தொலைபேசி இலக்கங்களுக்கு அறிவிக்குமாறு, அவரது தாயார் மற்றும் சகோதரி ஆகியோர் கேட்டுக்கொண்டுள்ளனர்.

Share
தொடர்புடையது
25 688de9f74b46a
இலங்கைசெய்திகள்

உள்நாட்டு இறைவரித் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு

2024/2025 மதிப்பீட்டு ஆண்டிற்கான வருமான அறிக்கைகளைச் சமர்ப்பிப்பதற்காக வழங்கப்பட்ட தனிப்பட்ட அடையாள எண்ணின் (PIN) செல்லுபடியாகும்...

25 688df4fc39fbe
இலங்கைசெய்திகள்

வாய்த்தர்க்கத்தில் ஒருவர் சுட்டுக்கொலை.. பொலிஸாரிடம் சரணடைந்த சந்தேகநபர்

அம்பலாந்தோட்டை, ஹுங்கம பிங்காம பகுதியில் இன்று (02) மதியம் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது....

25 688e26468e8e8
சினிமாசெய்திகள்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு காலமானார்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு உடல்நலக் குறைவால் காலமானார். அவர் தனது 71ஆவது வயதில்...

25 688e158f2c449
இலங்கைசெய்திகள்

சட்டத்தை நடைமுறைப்படுத்தியவரால் நிராகரிக்கப்பட்ட ஜனாதிபதி சிறப்புரிமைகள்

இலங்கையின் முதல் நிறைவேற்றதிகார ஜனாதிபதியான ஜே.ஆர்.ஜெயவர்த்தனவால் கொண்டுவரப்பட்ட ஜனாதிபதிகளுக்கான சலுகைகளை அவரே பெற்றுக்கொள்ளவில்லை என அரசியல்...