இலங்கைசெய்திகள்

தனமல்விலவில் சிறுமி ஒருவரை தகாத முறைக்கு உட்படுத்திய சம்பவம் : சட்ட வைத்திய அதிகாரியும் கைது

Share
6 28
Share

தனமல்விலவில் சிறுமி ஒருவரை தகாத முறைக்கு உட்படுத்திய சம்பவம் : சட்ட வைத்திய அதிகாரியும் கைது

மொனராகலை – தனமல்வில பகுதியில் 16 வயது பாடசாலை மாணவியை தவறான நடவடிக்கைக்கு உட்படுத்திய சம்பவம் தொடர்பான மருத்துவ பரிசோதனையை மேற்கொண்ட ஹம்பாந்தோட்டை மாவட்ட பொது வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரி தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த சட்ட வைத்திய அதிகாரி, தனது மகளை பரிசோதித்த போது திட்டியதாகவும், மிரட்டும் வகையில் நடந்து கொண்டதாகவும் கடந்த வாரம் தனமல்வில சிறுமியின் தாயார் முறையிட்டமையை அடுத்தே இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மேலும் பாதிக்கப்பட்ட மாணவி 22 மாணவர்களால் வன்புணர்ச்சிக்கு ஆளாக்கப்பட்டதாக பொலிஸ் மற்றும் சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையில் தாயார் முறைப்பாடு செய்திருந்தார்.

இந்தநிலையில் சட்ட வைத்திய அதிகாரியின் கடுமையான செயற்பாட்டிற்கு பிறகு தனது மகள் மனநிலை பாதிக்கப்பட்டுள்ளதாக சிறுமியின் தாய் கூறியுள்ளார்.

மேலும், குறித்த சிறுமி பொய் சொல்வதாக தெரிவித்தே அவரை சட்ட வைத்திய அதிகாரி திட்டியதாக தாயார் குறிப்பிட்டுள்ளார்.

அதேவேளை, கைது செய்யப்பட்ட சட்ட வைத்திய அதிகாரி, சனிக்கிழமை 300,000 ரூபா சரீரப்பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார்.

முன்னதாக, சம்பவத்தில் தொடர்புடைய 20இற்கும் மேற்பட்ட மாணவர்கள் விசாரணையின் பின்னர் விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்.

அத்துடன், சம்பவத்தை மூடிமறைத்த குற்றச்சாட்டில் சிறுமி படித்த பாடசாலையின் அதிபர் உட்பட நான்கு ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டு பின்னர் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Share
Related Articles
15 7
இலங்கைசெய்திகள்

தமிழரசின் பெருவெற்றி – நான் கூறியது நடந்து விட்டது….! மார்தட்டும் சுமந்திரன்

அன்று நான் கூறியது இன்று நிரூபணமாகியுள்ளது என இலங்கை தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளரான ஜனாதிபதி...

16 7
உலகம்செய்திகள்

ஹவுதிகளுக்கு பேரிழப்பு : யேமனின் முக்கிய விமான நிலையத்தை தகர்த்து அழித்தது இஸ்ரேல்

யேமனின் தலைநகரிலுள்ள சர்வதேச விமான நிலையத்தை வான்வழித் தாக்குதல்கள் மூலம் தகர்த்து அழித்துள்ளதாக இஸ்ரேல் இராணுவம்...

13 7
இலங்கைசெய்திகள்

நான் கூறியதை கேட்டிருந்தால் வெற்றி – ரணில் விக்ரமசிங்க

எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து சபைகளில் கூட்டணியாக போட்டியிட்டிருந்தால் ஐம்பது முதல் நூறு எண்ணிக்கையிலான இடங்களை வென்றிருக்க முடியும்...

12 7
இலங்கைசெய்திகள்

பல்கலைகளில் தொடரும் அடாவடித்தனம் : ஆறு மாணவர்கள் அதிரடியாக கைது

சக மாணவர் ஒருவரைத் தாக்கிய குற்றச்சாட்டில் ஸ்ரீ ஜெயவர்தனபுர பல்கலையை (University of Sri Jayewardenepura)...