IMG 20220416 WA0003
அரசியல்இலங்கைசெய்திகள்பிராந்தியம்

மட்டு. மாநகர சபையில் ஜேர்மன் எம்.பி.

Share

“இலங்கை பொருளாதார நெருக்கடிக்குள் வீழ்ந்திருப்பதன் காரணத்தால் மத்திய அரசின் மூலமான அபிவிருத்திகளை மட்டக்களப்பு மாநகர சபை எதிர்பார்க்க முடியாது. ஆகவே, மட்டு. மாநகர சபையின் அபிவிருத்தியில் ஜேர்மன் பங்காளியாக இணைந்துகொள்ள வேண்டும்.”

– இவ்வாறு மட்டக்களப்பு மாநகர சபை மேயர் தி.சரணபவன் கோரிக்கை விடுத்தார்.

ஜேர்மன் நாடாளுமன்ற உறுப்பினர் மோஹாத் இன்று மட்டக்களப்பு மாநகர சபைக்கு விஜயம் மேற்கொண்டார். இதன்போதே மாநகர சபையின் மேயர் மேற்கண்டவாறு கோரிக்கை விடுத்தார்.

ஜேர்மன் எம்.பி. இந்த விஜயத்தின்போது மட்டக்களப்பு மாநகர சபைக்கு உடன்படிக்கையின் கீழ் 2003ஆம் ஆண்டு அன்பளிப்பு செய்யப்பட்ட வாகனங்களையும் பார்வையிட்டார்.

குறித்த வாகனங்கள் சிறந்த முறையில் பராமரிக்கப்படுகின்றமை தொடர்பில் மேயருக்குத் தனது பாராட்டுகளை அவர் தெரிவித்தார்.

அதைத் தொடர்ந்து மாநகர சபையின் மண்டபத்தில் மாநகர சபை மேயர், உறுப்பினர்கள் மற்றும் உத்தியோகத்தர்களை அவர் சந்தித்துக் கலந்துரையாடினார்.

கடந்த காலத்தில் ஜேர்மன் முனீச் மாநகர சபையால் மட்டக்களப்பு மாநகர சபையில் மேற்கொள்ளப்பட்ட அபிவிருத்திப் பணிகள் மற்றும் உதவிகளுக்கு நன்றி தெரிவித்த மட்டக்களப்பு மாநகர சபை மேயர் சரவணபவன், எதிர்காலத்தில் ஜேர்மன் அரசு ஊடாக ஒப்பந்தங்களைச் செய்து மேலும் அபிவிருத்திப் பணிகளை எதிர்பார்ப்பதாகவும் கூறினார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Recent Posts

தொடர்புடையது
image 95099f5203
செய்திகள்இலங்கை

கொழும்பில் மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்திய வன்னி மாவட்ட எம்.பி. ரவிகரன்: வரவு செலவுத் திட்ட அமர்வுக்கு மத்தியில் உணர்வெழுச்சி!

தேச விடுதலைக்காகப் போராடி மடிந்த வீர மறவர்களை நினைவுகூரும் மாவீரர் வாரம் வெள்ளிக்கிழமை (நவம்பர் 21)...

images 1 11
செய்திகள்இலங்கை

அரகலய போராட்டத்தை ஜனநாயக ரீதியில் கட்டுப்படுத்தினோம்: சர்வதேச சக்திகளின் ஆதரவு இருந்தாலும் பணியவில்லை – முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க!

நாட்டில் இடம்பெற்ற அரகலய போராட்டத்தை ஜனநாயக ரீதியில் கட்டுப்படுத்தியதாக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்....

image e0f1498f29
செய்திகள்இலங்கை

தமிழ் தேசிய மாவீரர் வாரம் ஆரம்பம்: வேலணை சாட்டி துயிலும் இல்லத்தில் ஈகச் சுடரேற்றல் நிகழ்வு!

தேச விடுதலைக்காக போராடி மடிந்த வீர மறவர்களை நினைவுகூரும் தமிழ் தேசிய மாவீரர் வாரத்தின் ஆரம்ப...

Archchuna Ramanathan 1200px 24 11 22
செய்திகள்அரசியல்இலங்கை

பாராளுமன்ற உணவகத்தில் எம்.பி.க்கு கொலை மிரட்டல்: முஹம்மட் பைசல் மீது அர்ச்சுனா எம்.பி. குற்றச்சாட்டு!

தேசிய மக்கள் சக்தியின் (NPP) புத்தளம் மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரால், இன்று (நவ 21)...