IMG 20220416 WA0003
அரசியல்இலங்கைசெய்திகள்பிராந்தியம்

மட்டு. மாநகர சபையில் ஜேர்மன் எம்.பி.

Share

“இலங்கை பொருளாதார நெருக்கடிக்குள் வீழ்ந்திருப்பதன் காரணத்தால் மத்திய அரசின் மூலமான அபிவிருத்திகளை மட்டக்களப்பு மாநகர சபை எதிர்பார்க்க முடியாது. ஆகவே, மட்டு. மாநகர சபையின் அபிவிருத்தியில் ஜேர்மன் பங்காளியாக இணைந்துகொள்ள வேண்டும்.”

– இவ்வாறு மட்டக்களப்பு மாநகர சபை மேயர் தி.சரணபவன் கோரிக்கை விடுத்தார்.

ஜேர்மன் நாடாளுமன்ற உறுப்பினர் மோஹாத் இன்று மட்டக்களப்பு மாநகர சபைக்கு விஜயம் மேற்கொண்டார். இதன்போதே மாநகர சபையின் மேயர் மேற்கண்டவாறு கோரிக்கை விடுத்தார்.

ஜேர்மன் எம்.பி. இந்த விஜயத்தின்போது மட்டக்களப்பு மாநகர சபைக்கு உடன்படிக்கையின் கீழ் 2003ஆம் ஆண்டு அன்பளிப்பு செய்யப்பட்ட வாகனங்களையும் பார்வையிட்டார்.

குறித்த வாகனங்கள் சிறந்த முறையில் பராமரிக்கப்படுகின்றமை தொடர்பில் மேயருக்குத் தனது பாராட்டுகளை அவர் தெரிவித்தார்.

அதைத் தொடர்ந்து மாநகர சபையின் மண்டபத்தில் மாநகர சபை மேயர், உறுப்பினர்கள் மற்றும் உத்தியோகத்தர்களை அவர் சந்தித்துக் கலந்துரையாடினார்.

கடந்த காலத்தில் ஜேர்மன் முனீச் மாநகர சபையால் மட்டக்களப்பு மாநகர சபையில் மேற்கொள்ளப்பட்ட அபிவிருத்திப் பணிகள் மற்றும் உதவிகளுக்கு நன்றி தெரிவித்த மட்டக்களப்பு மாநகர சபை மேயர் சரவணபவன், எதிர்காலத்தில் ஜேர்மன் அரசு ஊடாக ஒப்பந்தங்களைச் செய்து மேலும் அபிவிருத்திப் பணிகளை எதிர்பார்ப்பதாகவும் கூறினார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
25 694ededb0ff94
செய்திகள்உலகம்

ஜப்பான் டயர் தொழிற்சாலையில் ஊழியர் நடத்திய கத்திக்குத்து: 15 பேர் காயம், 5 பேர் நிலை கவலைக்கிடம்!

ஜப்பான் தலைநகர் டோக்கியோவிற்கு அருகிலுள்ள மிஷிமா (Mishima) நகரில் அமைந்துள்ள வாகன டயர் உற்பத்தித் தொழிற்சாலையில்,...

articles2FamQmNaW4XK0qSBeE32Ow
செய்திகள்இலங்கை

மத்திய மாகாணத்தில் 160 பாடசாலைகளுக்கு நிலச்சரிவு அபாயம்: விரிவான அறிக்கை பிரதமரிடம் சமர்ப்பிப்பு!

மத்திய மாகாணத்தில் நிலச்சரிவு அபாயத்தில் உள்ள பாடசாலைகள் குறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு தேசிய கட்டிட...

25 694f2ec30f150
செய்திகள்இலங்கை

அதிபர் தாக்கியதில் மாணவன் படுகாயம்: 8 நாட்களாக வைத்தியசாலையில் அனுமதி – அரசியல் தலையீடெனப் பெற்றோர் குற்றச்சாட்டு!

சூரியவெவ பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றின் அதிபர் மாணவன் மீது நடத்திய மனிதாபிமானமற்ற தாக்குதலால், பாதிக்கப்பட்ட...

image 64d1628410
உலகம்செய்திகள்

சிரியா பள்ளிவாசலில் குண்டுவெடிப்பு: வெள்ளிக்கிழமை தொழுகையின் போது 8 பேர் பலி, 18 பேர் காயம்!

சிரியாவின் மூன்றாவது பெரிய நகரமான ஹோம்ஸில் (Homs) உள்ள பள்ளிவாசல் ஒன்றில் நேற்று (26) வெள்ளிக்கிழமை...