ஐ.நா. மனித உரிமைகள் பேரவையானது, தேசத் துரோகிகளின் புகலிடமாகும் – என சாடியுள்ளார் தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும், முன்னாள் அமைச்சருமான விமல் வீரவன்ச.
ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 51 ஆவது கூட்டத் தொடர்பில் கருத்து வெளியிட்ட அவர் மேலும் கூறியவை வருமாறு,
” ஐ.நா. மனித உரிமைகள் பேரவையென்பது அமெரிக்காவின் ஒரு கருவியாகும். தமது நிகழ்ச்சி நிரலுக்கு அப்பால் செல்லும் நாடுகளை தண்டிப்பதற்காகவே இந்த கருவி பயன்படுத்தப்பட்டுவருகின்றது.
இலங்கையானது பிரிவினைவாதத்தை தோற்கடித்து, அவர்களின் (அமெரிக்காவின்) உபாய மார்க்கத்திலிருந்து வெளியே வந்ததால்தான் இலங்கைக்கு அழுத்தம் கொடுக்கப்படுகின்றது. எதிரணிகள் ஜெனிவா சென்றுள்ளன. தேசத்துரோகிகளின் இருப்பிடம்தான் ஜெனிவாவாகும்.” – என்றார்
srilankanews
1 Comment