rtjy 215 scaled
இலங்கைசெய்திகள்

கொழும்பில் பெருந்தொகை கடவுச்சீட்டுகளுடன் சிக்கிய நபர்

Share

கொழும்பில் பெருந்தொகை கடவுச்சீட்டுகளுடன் சிக்கிய நபர்

கொழும்பில் வாடகை வீட்டில் சட்டவிரோதமான முறையில் வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்தை நடத்தி வந்த ஒருவர் கைது செய்யப்பட்டதாக கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது.

குறித்த நபரிடம் 32 கடவுச்சீட்டுகள், 3 தேசிய அடையாள அட்டைகள், பிரதேச செயலகங்கள் மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு சொந்தமான 9 உத்தியோகபூர்வ முத்திரைகள், 5 கிராம சேவை சான்றிதழ்கள், 9 பிறப்பு மற்றும் திருமண சான்றிதழ்களும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

ராகம – சிறிவர்தன வீதியில் சட்டவிரோத வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் ஒன்று இயங்கி வருவதாக கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது, ​​இந்த வீடு 6 மாதங்களுக்கு முன்னர் 8,500 ரூபாய் வாடகை அடிப்படையில் பெற்றுக் கொள்ளப்பட்டமை தெரியவந்துள்ளது.

இத்தாலி உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கு அனுப்புவதாக கூறிய, 3 இலட்சம் ரூபாய் முதல் பெருந்தொகை பணம்சந்தேக நபரினால் பெற்றுக்கொள்ளப்பட்டதாக முதற்கட்ட விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் நுகேகொட – மஹரகம பகுதியைச் சேர்ந்த 67 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.

Share
தொடர்புடையது
03 19
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையில் தங்கத்தின் விலை சடுதியாக வீழ்ச்சி: இன்று ஒரே நாளில் ரூ. 13,000 குறைவு!

உலக சந்தையில் தங்கத்தின் விலை வீழ்ச்சியடைந்ததை அடுத்து, இலங்கையிலும் தங்கத்தின் விலை கணிசமாகக் குறைந்துள்ளதாக சந்தைத்...

25 10
இந்தியாசெய்திகள்

டெல்லி தீ விபத்து: மூன்று குழந்தைகள் உட்பட ஒன்பது பேர் பலி; பிரதமர் மோடி இரங்கல்!

இந்தியத் தலைநகர் டெல்லியின் பாலம் (Palam) பகுதியில் உள்ள நான்கு மாடிக் கட்டடம் ஒன்றில் இன்று...

20 17
செய்திகள்அரசியல்இலங்கை

நாமலுக்கு எதிரான மின்சாரக் கட்டண நிலுவை வழக்கு: ஜூலை 1-ம் திகதி உயர் நீதிமன்றத்தில் விசாரணை!

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவின் திருமண நிகழ்விற்காகப் பயன்படுத்தப்பட்ட மின்சாரத்திற்கான 20 இலட்சம் ரூபாவிற்கும் (2...

19 15
செய்திகள்உலகம்

அலி லாரிஜானி படுகொலைக்கு ஈரான் பதிலடி: டெல் அவிவ் மீது கிளஸ்டர் ரக குண்டுகளால் தாக்குதல்!

ஈரானின் மூத்த பாதுகாப்புத் தலைவரான அலி லாரிஜானி, இஸ்ரேலியத் தாக்குதலில் கொல்லப்பட்டதற்குப் பதிலடியாக, இஸ்ரேலின் டெல்...