tamilnih 5 scaled
இலங்கைசெய்திகள்

பொதுஜன பெரமுனவின் செயற்குழு உறுப்பினராக தமிழ் பிரதிநிதி

Share

பொதுஜன பெரமுனவின் செயற்குழு உறுப்பினராக தமிழ் பிரதிநிதி

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் ஒருங்கிணைப்புச் செயலாளரான கீதநாத் காசிலிங்கம் பொதுஜன பெரமுனவின் செயற்குழு மற்றும் அரசியல் பேரவை ஆகியவற்றுக்கு உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார்.

அண்மையில் இடம்பெற்ற கட்சி உறுப்பினர்களின் மறுசீரமைப்பின் போது அவர் இந்த குழுக்களின் உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார்.

காசிலிங்கம் பொதுஜன பெரமுனவின் இரண்டு குழுக்களுக்கும் நியமிக்கப்பட்டுள்ள தமிழ் பிரதிநிதி என்ற நிலையில், குறிப்பாக வடக்கு மற்றும் கிழக்கில் தமிழ் சமூகம் மத்தியில் கட்சியின் கொள்கைகளை வலுப்படுத்துவது தொடர்பில் செயற்படுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கீதநாத் காசிலிங்கம் இதற்கு முன்னர் மகிந்த ராஜபக்ச பிரதமராக இருந்த போது வடக்கு மற்றும் கிழக்கில் புனர்வாழ்வு விவகாரங்களுக்கான பிரதமரின் விசேட பிரதிநிதியாக செயற்பட்டுள்ளார்.

இந்த நிலையில் பொதுஜன பெரமுனவின் செயற்குழு மற்றும் அரசியல் பேரவைக்கு நியமிக்கப்பட்ட இளம் உறுப்பினர்களில் இவரும் ஒருவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share
தொடர்புடையது
Accidentkojioh
இலங்கை

திருமணத்திற்கு 2 நாள் வெளிநாடு செல்ல 3 நாள் இளைஞர் விபத்தில் பலி!

மாத்தறை, அக்குரஸ்ஸ பகுதியில் சம்பவித்த கோர விபத்தில் இரண்டு தினங்களில் திருமணத்திற்கு தயாராக இருந்த 25...

ஷிரான் பாசிக்
இலங்கை

வறுமைக்கோட்டிலிருந்து டுபாய் வரை ஷிரான் பாசிக் தொடர்பில் வெளியாகும் உண்மைகள்!

பிரபல போதைப்பொருள் கடத்தல்காரரான ஷிரான் பாசிக் தொடர்பில் பல தகவல்கள் தற்போது வெளியாகிய வண்ணம் உள்ளன....

கெஹெலிய
இலங்கை

கெஹெலிய ரம்புக்வெல்ல பிணையில் செல்ல அனுமதி!

இன்றைய தினம் காலை, முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல, வாக்குமூலமொன்றினை வழங்குவதற்காக சென்றிருந்த நிலையில்...

மஹீல் சேனாரத்ன
இலங்கை

மஹீல் சேனாரத்ன பிணையில் விடுதலை!

இலங்கை மீன்பிடி கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் மஹீல் சேனாரத்ன இலஞ்ச அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை...