images 6 3
இலங்கைசெய்திகள்

உயர்தரப் பரீட்சைகள் ஜனவரி 12 இல் மீண்டும் ஆரம்பம்: ஏனைய வகுப்புகளுக்கு மூன்றாம் தவணைப் பரீட்சை இரத்து!

Share

நாட்டில் ஏற்பட்ட அனர்த்த நிலைமையினால் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருந்த கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையில் நடத்தப்படாது எஞ்சியுள்ள பாடங்களுக்கான பரீட்சைகளை எதிர்வரும் ஜனவரி 12ஆம் திகதி முதல் மீண்டும் நடத்துவதற்குப் பரீட்சைகள் திணைக்களம் தீர்மானித்துள்ளது.

கல்வி அமைச்சின் செயலாளர் நாலக்க களுவெவ விசேட செய்தியாளர் சந்திப்பொன்றில் கலந்துகொண்டு இந்தக் கால அட்டவணையை உறுதிப்படுத்தினார்.

உயர்தரப் பரீட்சை தவிர, ஏனைய வகுப்புகளுக்கான மூன்றாம் தவணைப் பரீட்சை நடத்தப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், கல்விப் பொதுத் தராதர சாதாரண தர மாணவர்களுக்கு மாத்திரம் மூன்றாம் தவணைப் பரீட்சை இடம்பெறும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

Share
தொடர்புடையது
22 4
செய்திகள்இலங்கைபிராந்தியம்

யாழ்ப்பாணத்திலிருந்து காணாமல் போன இரு மீனவர்கள் தமிழ்நாடு கடலோரப் பகுதியில் மீட்பு!

யாழ்ப்பாணம் காங்கேசன்துறை ஊரணி கடற்பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை மீன்பிடிக்கச் சென்ற நிலையில் காணாமல் போன இரண்டு...

21 4
செய்திகள்அரசியல்இலங்கை

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் வழக்கு: சுரேஷ் சலே மூன்றாவது சந்தேகநபராகப் பெயரிடப்பட்டார்!

அரச புலனாய்வுச் சேவையின் (SIS) முன்னாள் பிரதானியும், ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரலுமான சுரேஷ் சலே, உயிர்த்த...

20 3
செய்திகள்உலகம்

அஸர்பைஜான் மீது ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான நிலையம் மற்றும் பாடசாலை இலக்கு!

மத்திய கிழக்கில் நிலவும் போர் பதற்றம் அண்டை நாடுகளுக்கும் பரவி வரும் நிலையில், அஸர்பைஜானின் கட்டுப்பாட்டில்...

19 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

போலி உறுதிப்பத்திரம் தயாரித்த பெண் சட்டத்தரணிக்கு 12 ஆண்டு சிறை: கொழும்பு மேல் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

கொழும்பு பொரளைப் பகுதியில் உள்ள பெறுமதியான காணியொன்றுக்குப் போலி உறுதிப்பத்திரங்களைத் தயாரித்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட பெண்...