நாட்டில் ஏற்பட்ட அனர்த்த நிலைமையினால் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருந்த கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையில் நடத்தப்படாது எஞ்சியுள்ள பாடங்களுக்கான பரீட்சைகளை எதிர்வரும் ஜனவரி 12ஆம் திகதி முதல் மீண்டும் நடத்துவதற்குப் பரீட்சைகள் திணைக்களம் தீர்மானித்துள்ளது.
கல்வி அமைச்சின் செயலாளர் நாலக்க களுவெவ விசேட செய்தியாளர் சந்திப்பொன்றில் கலந்துகொண்டு இந்தக் கால அட்டவணையை உறுதிப்படுத்தினார்.
உயர்தரப் பரீட்சை தவிர, ஏனைய வகுப்புகளுக்கான மூன்றாம் தவணைப் பரீட்சை நடத்தப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், கல்விப் பொதுத் தராதர சாதாரண தர மாணவர்களுக்கு மாத்திரம் மூன்றாம் தவணைப் பரீட்சை இடம்பெறும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.