எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் எரிவாயுவின் விலைகளில் பாரிய மாற்றம் ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜனவரி முதலாம் திகதி முதல் பெறுமதி சேர் வரி (VAT) 18 வீதத்தினால் அதிகரிக்கப்படவுள்ளது.
இதன் காரணமாக எரிபொருள் மற்றும் எரிவாயுவின் விலைகள் அதிகரிக்குமென நிதி அமைச்சின் வரிக் கொள்கை ஆலோசகர் தனுஜா பெரேரா தெரிவித்துள்ளார்.
மேலும், எரிவாயுவுக்கான 18 சதவீத VAT வரியை நடைமுறைபடுத்தும்போது, 2.5 சதவீத துறைமுகம் மற்றும் விமான நிலைய வரி நீக்கப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.