நாட்டில் ஏற்படும் சமையல் எரிவாயு வெடிப்புச் சம்பவங்கள் குறித்து ஆராய்வதற்காக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவினால் 8 பேர் கொண்ட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் ஜனாதிபதி ஊடக பிரிவு செய்தி வெளியிட்டுள்ளது.
இவ்வெடிப்பு சம்பவம் தொடர்பில் ஆராய்ந்து அதற்கான தீர்வுகளுடன் கூடிய அறிக்கையை விரைவில் கையளிக்குமாறு ஜனாதிபதி குறித்த குழுவிற்கு அறிவுறுத்தியுள்ளார்.
இந்த குழுவின் தலைவராக பேராசிரியர் சாந்த வல்பொலகே நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
#SriLankaNews
Leave a comment