tamilnid 3 scaled
இலங்கைசெய்திகள்

பொலிஸ் அதிகாரிகள் போன்று வீடொன்றிற்குள் நுழைந்த கும்பல்

Share

பொலிஸ் அதிகாரிகள் போன்று வீடொன்றிற்குள் நுழைந்த கும்பல்

குருணாகல், வாரியபொல பிரதேசத்தில் பொலிஸ் உத்தியோகத்தர்கள் என கூறிக்கொண்டு வீடொன்றிற்குள் புகுந்தவர்கள் கொள்ளையில் ஈடுபட்டுள்ளனர்.

இதன்போது அங்கிருந்த தங்கச் சங்கிலியை திருடிச் சென்றுள்ள நிலையில், விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஹொரொம்புவ, பத்ராவத்த பிரதேசத்தில் அமைந்துள்ள வீடொன்றில் நேற்று இரவு இந்த திருட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளது.

ஒரு சிலர் வெள்ளை வேனில் வந்து, தாங்கள் பண்டாரகம பொலிஸ் நிலையத்தை சேர்ந்தவர்கள் எனவும், வீட்டை சோதனையிடவுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

சோதனையின் பின்னர் அவர்கள் வீட்டை விட்டு வெளியே சென்றபோது வீட்டில் இருந்த ஒன்றரை பவுன் தங்கச் சங்கிலி காணாமல் போனது தெரியவந்தது.

சம்பவத்தின் போது ஊனமுற்ற தாயும் தானும் மட்டுமே வீட்டில் இருந்ததாக வீட்டின் உரிமையாளரான பெண் பொலிஸாரிடம் முறையிட்டுள்ளார்.

Share
தொடர்புடையது
நாடாளுமன்ற உறுப்பினர்களின் வேதனம்
இலங்கை

நாடாளுமன்ற உறுப்பினர்களின் வேதனம் உயர்த்தப்பட்டுள்ளதா?

அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ, இன்று நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில்...

Wei Huaxiang
இலங்கை

புதிய சீனத்தூதுவர் இலங்கைக்கு விஜயம்.

இலங்கைக்கான புதிய சீனத் தூதுவராக நியமிக்கப்பட்டுள்ள வெய் ஹுவாசியாங் (Wei Huaxiang) தமது பதவியைப் பொறுப்பேற்பதற்காக...

வாடிகளுக்குள் புகுந்த கடல்நீர்
இலங்கை

முல்லைத்தீவில் திடீரென வாடிகளுக்குள் புகுந்த கடல்நீர்!

இன்று காலை, திடீரென அதிகரித்த கடற்சீற்றம், முல்லைத்தீவு மாவட்டத்தில் காரணமாக கடல்நீர் கரையைத் தாண்டி மீனவர்களின்...

Eelam Refugees
இலங்கை

இந்தியாவிலிருந்து நாடு திரும்பும் அகதிகளுக்கான அறிவித்தல்!

யுத்த காலத்தில் இலங்கையிலிருந்து சட்டவிரோதமான முறையில் இந்தியாவுக்கு இடம்பெயர்ந்து, தற்போது ஐக்கிய நாடுகள் அகதிகள் உயர்ஸ்தானிகராலயத்தின்...