14 35
இலங்கைசெய்திகள்

அழுகிய முட்டைகள் வைத்திருந்த உணவகத்துக்கு நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு!

Share

எழுநூறுக்கும் அதிகமான அழுகிய முட்டைகளை களஞ்சியப்படுத்தி வைத்திருந்த கம்பளை உணவகமொன்றுக்கு நீதிமன்ற உத்தரவின் பிரகாரம் சீல் வைக்கப்பட்டுள்ளது.

கம்பளை, மருத்துவமனைக்கு அருகில் இயங்கி வந்த நாவலப்பிட்டிய வீதியில் சபாரி அண்ட் பேக்கரி என்ற உணவகத்துக்கே இவ்வாறு சீல் வைக்கப்பட்டுள்ளது.

பொதுமக்களிடம் இருந்து கிடைக்கப் பெற்ற முறைப்பாடுகளின் அடிப்படையில் பொது சுகாதார பரிசோதகர்கள் குறித்த உணவகத்தைச் சோதனையிட்ட போது அங்கு அழுகி, புழுக்கள் நெளியும் வகையில் சுமார் 700 முட்டைகள் களஞ்சியப்படுத்தப்பட்டிருந்தததைக் கண்டறிந்துள்ளனர்.

பிரைட் ரைஸ் மற்றும் கொத்து ரொட்டி போன்ற உணவுகளைத் தயாரிப்பதற்கும், அயலில் உள்ள ஏனைய உணவகங்களுக்கு குறைந்த விலையில் விற்பனை செய்வதற்கும் அதனைக் களஞ்சியப்படுத்தி வைத்திருந்தமை விசாரணையில் தெரிய வந்துள்ளது.

இதனையடுத்து கம்பளை மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் குறித்த உணவக உரிமையாளருக்கு எதிராக வழக்குத் தொடுக்கப்பட்ட நிலையில் அவருக்கு 53 ஆயிரம் ரூபா அபராதம் விதிக்கப்பட்டு, உணவகத்துக்கு சீல் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

உணவகத்தின் சுகாதார சீர்கேடுகளை நிவர்த்தி செய்த பின்னர் பொதுச் சுகாதார பரிசோதகர்களின் பரிசோதனையின் பின்னர் மீண்டும் உணவகத்தை திறக்கவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

Share

Recent Posts

தொடர்புடையது
MediaFile 4 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இன்று மகா சிவராத்திரி! – சிவாலயங்களில் குவியும் பக்தர்கள்; இரவு முழுவதும் விழித்திருந்து வழிபாடு!

ஆன்மீக ரீதியாகவும் அறிவியல் ரீதியாகவும் மிக முக்கியமான தினமாகக் கருதப்படும் மகா சிவராத்திரி விரதம் இன்று...

MediaFile 4 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

அக்குரேகொட படுகொலை: கொலையாளிகளின் கார் மீட்பு! – சட்டத்தரணியின் ‘தரப்பு மாற்றம்’ மரணத்திற்கு காரணமா?

அக்குரேகொட பகுதியில் சட்டத்தரணி மற்றும் அவரது மனைவியைப் படுகொலை செய்யப் பயன்படுத்தப்பட்டதாகச் சந்தேகிக்கப்படும் கார், காலி...

image 1d03fce287
செய்திகள்இலங்கைபிராந்தியம்

உங்கள் கையெழுத்து உங்கள் உரிமையைக் காக்கும்’: PTA-வை நீக்கக் கோரி வடகிழக்கில் ஒரு லட்சம் கையெழுத்துப் போராட்டம்!

சர்ச்சைக்குரிய பயங்கரவாதத் தடைச்சட்டம் (PTA) மற்றும் புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்ட முன்மொழிவுகளை (ATA) முற்றாக...

image 914163dc5e
செய்திகள்இலங்கைபிராந்தியம்

கொழும்பு ஜிந்துபிட்டியில் பயங்கரம்: சிகையலங்கார நிலையத்திற்குள் புகுந்து துப்பாக்கிச் சூடு! 

கொழும்பு, ஜிந்துபிட்டி வரக்கா சந்தி பகுதியிலுள்ள முடியலங்கார நிலையம் (Barber Shop) ஒன்றிற்குள் நேற்றிரவு (14)...