14 35
இலங்கைசெய்திகள்

அழுகிய முட்டைகள் வைத்திருந்த உணவகத்துக்கு நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு!

Share

எழுநூறுக்கும் அதிகமான அழுகிய முட்டைகளை களஞ்சியப்படுத்தி வைத்திருந்த கம்பளை உணவகமொன்றுக்கு நீதிமன்ற உத்தரவின் பிரகாரம் சீல் வைக்கப்பட்டுள்ளது.

கம்பளை, மருத்துவமனைக்கு அருகில் இயங்கி வந்த நாவலப்பிட்டிய வீதியில் சபாரி அண்ட் பேக்கரி என்ற உணவகத்துக்கே இவ்வாறு சீல் வைக்கப்பட்டுள்ளது.

பொதுமக்களிடம் இருந்து கிடைக்கப் பெற்ற முறைப்பாடுகளின் அடிப்படையில் பொது சுகாதார பரிசோதகர்கள் குறித்த உணவகத்தைச் சோதனையிட்ட போது அங்கு அழுகி, புழுக்கள் நெளியும் வகையில் சுமார் 700 முட்டைகள் களஞ்சியப்படுத்தப்பட்டிருந்தததைக் கண்டறிந்துள்ளனர்.

பிரைட் ரைஸ் மற்றும் கொத்து ரொட்டி போன்ற உணவுகளைத் தயாரிப்பதற்கும், அயலில் உள்ள ஏனைய உணவகங்களுக்கு குறைந்த விலையில் விற்பனை செய்வதற்கும் அதனைக் களஞ்சியப்படுத்தி வைத்திருந்தமை விசாரணையில் தெரிய வந்துள்ளது.

இதனையடுத்து கம்பளை மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் குறித்த உணவக உரிமையாளருக்கு எதிராக வழக்குத் தொடுக்கப்பட்ட நிலையில் அவருக்கு 53 ஆயிரம் ரூபா அபராதம் விதிக்கப்பட்டு, உணவகத்துக்கு சீல் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

உணவகத்தின் சுகாதார சீர்கேடுகளை நிவர்த்தி செய்த பின்னர் பொதுச் சுகாதார பரிசோதகர்களின் பரிசோதனையின் பின்னர் மீண்டும் உணவகத்தை திறக்கவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

Share
தொடர்புடையது
25 6839e6fb171fc
இலங்கைசெய்திகள்

வங்கிப் பணத்தை வட்டிக்கு விட்ட அரச வங்கி காசளர் கைது

இலங்கையின் பிரதான அரச வங்கிக் கிளையொன்றின் பிரதம காசளர் ஒருவர், பாரியளவு வங்கிப் பணத்தை வட்டிக்கு...

25 6839ea056de1c
இலங்கைசெய்திகள்

யாழில் பிறந்து 3 மாதங்களேயான பெண் குழந்தை பரிதாபமாக உயரிழப்பு!

யாழில்(Jaffna) பிறந்து 3 மாதங்களேயான பெண் குழந்தை ஒன்று நேற்றையதினம் (29) பரிதாபமாக உயிரிழந்துள்ளது. சங்கானை...

harshana nanayakkara
இலங்கைசெய்திகள்

உருவாகவுள்ள புதிய பயங்கரவாத தடை சட்டம்..! அரசாங்கத்தின் திட்டம்

உலகளாவிய ரீதியில் உருவாகும் பயங்கரவாத சவால்களை எதிர்கொள்வதற்கு புதிய பயங்கரவாத தடை சட்டம் அவசியம் என...

25 683949cc67811
இலங்கைசெய்திகள்

அதிரடி காட்டும் அநுர அரசு! தொடரும் கைதுப் பட்டியல் – சிக்குவார்களாக முக்கிய புள்ளிகள்

சட்ட திட்டங்களுக்கு உட்பட்ட வகையிலேயே கள்வர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டியுள்ளது, அந்த வகையில் கள்வர்கள்...