14 35
இலங்கைசெய்திகள்

அழுகிய முட்டைகள் வைத்திருந்த உணவகத்துக்கு நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு!

Share

எழுநூறுக்கும் அதிகமான அழுகிய முட்டைகளை களஞ்சியப்படுத்தி வைத்திருந்த கம்பளை உணவகமொன்றுக்கு நீதிமன்ற உத்தரவின் பிரகாரம் சீல் வைக்கப்பட்டுள்ளது.

கம்பளை, மருத்துவமனைக்கு அருகில் இயங்கி வந்த நாவலப்பிட்டிய வீதியில் சபாரி அண்ட் பேக்கரி என்ற உணவகத்துக்கே இவ்வாறு சீல் வைக்கப்பட்டுள்ளது.

பொதுமக்களிடம் இருந்து கிடைக்கப் பெற்ற முறைப்பாடுகளின் அடிப்படையில் பொது சுகாதார பரிசோதகர்கள் குறித்த உணவகத்தைச் சோதனையிட்ட போது அங்கு அழுகி, புழுக்கள் நெளியும் வகையில் சுமார் 700 முட்டைகள் களஞ்சியப்படுத்தப்பட்டிருந்தததைக் கண்டறிந்துள்ளனர்.

பிரைட் ரைஸ் மற்றும் கொத்து ரொட்டி போன்ற உணவுகளைத் தயாரிப்பதற்கும், அயலில் உள்ள ஏனைய உணவகங்களுக்கு குறைந்த விலையில் விற்பனை செய்வதற்கும் அதனைக் களஞ்சியப்படுத்தி வைத்திருந்தமை விசாரணையில் தெரிய வந்துள்ளது.

இதனையடுத்து கம்பளை மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் குறித்த உணவக உரிமையாளருக்கு எதிராக வழக்குத் தொடுக்கப்பட்ட நிலையில் அவருக்கு 53 ஆயிரம் ரூபா அபராதம் விதிக்கப்பட்டு, உணவகத்துக்கு சீல் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

உணவகத்தின் சுகாதார சீர்கேடுகளை நிவர்த்தி செய்த பின்னர் பொதுச் சுகாதார பரிசோதகர்களின் பரிசோதனையின் பின்னர் மீண்டும் உணவகத்தை திறக்கவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

Share
தொடர்புடையது
25 67af2b3d1193c
செய்திகள்உலகம்

இலங்கை தூதுவர் உட்பட 30 இராஜதந்திரிகளைத் திரும்ப அழைக்கிறது டிரம்ப் நிர்வாகம்!

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தலைமையிலான புதிய நிர்வாகம், இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சுங்...

56833060 1004
செய்திகள்உலகம்

ரஷ்யாவில் கார் குண்டு வெடிப்பு: லெப்டினன்ட் ஜெனரல் ஃபனில் சர்வரோவ் உயிரிழப்பு!

ரஷ்ய ஆயுதப்படைகளின் முக்கிய அதிகாரிகளில் ஒருவரான லெப்டினன்ட் ஜெனரல் ஃபனில் சர்வரோவ் (Fanil Sarvarov), கார்...

8711452 29012025vijay
செய்திகள்இந்தியா

தமிழக வெற்றிக் கழகத்தின் 2026 வியூகம்: 234 தொகுதிகளுக்கும் வேட்பாளர் பட்டியல் தயார்!

2026 தமிழக சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ள நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் (த.வெ.க) மிகத்...

Bangladesh
செய்திகள்உலகம்

பங்களாதேஷில் மீண்டும் வன்முறை: மற்றுமொரு மாணவத் தலைவர் மீது துப்பாக்கிச் சூடு!

பங்களாதேஷில் அரசியல் பதற்றங்களுக்கு மத்தியில், ஷேக் ஹசீனாவின் ஆட்சி வீழ்ச்சிக்குக் காரணமான போராட்டங்களில் முன்னின்று செயற்பட்ட...