3 50
இலங்கைசெய்திகள்

அரசாங்கம் மீது கேள்விகளை தொடுக்கும் கம்மன்பில

Share

அரசாங்கம் மீது கேள்விகளை தொடுக்கும் கம்மன்பில

உலக வங்கியிடமிருந்து பெறப்பட்ட 200 மில்லியன் அமெரிக்க டொலர் கடன் தொடர்பில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தரப்பும், உலக வங்கியும் உண்மையாகச் செயற்படுகின்றனவா என்ற உண்மையை அரசாங்கம் வெளிப்படுத்த வேண்டும் என கோரப்பட்டுள்ளது

முன்னாள் அமைச்சர் உதய கம்மன்பில ( Udaya Gammanpila ), இந்த கோரிக்கையை விடுத்துள்ளார்.

இது தொடர்பில், ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த கம்மன்பில, தற்போதைய அரசாங்கம் எந்தவொரு அமைப்பிடமிருந்தோ அல்லது ஸ்தாபனங்களிடமிருந்தோ எந்தவொரு கடனுதவியையும் பெறவில்லை என அமைச்சரவை பேச்சாளரும் அமைச்சருமான விஜித ஹேரத் வெளியிட்ட கருத்துக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.

இந்தநிலையில், அரசாங்கம் ஆட்சிக்கு வந்து ஒரு மாத காலத்திற்குள் கடன் பெற்றுள்ளதா? இல்லையா என்பதை சரிபார்க்க உலக வங்கியின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தைப் பார்க்குமாறு பொதுமக்களை வலியுறுத்தியுள்ளார்.

இதில் அரசாங்கம் உண்மையாக இருந்தால், உலக வங்கி பொய் சொல்ல வேண்டும் அல்லது உலக வங்கியின் கூற்று உண்மையாக இருந்தால், அமைச்சர் விஜித ஹேரத் பொய் சொல்கிறார் என்ற எடுத்துக்கொள்ள முடியும் என்று கம்மன்பில குறிப்பிட்டுள்ளார்.

நேற்றைய நிலவரப்படி, தற்போதைய அரசாங்கம், திறைசேரி உண்டியல்கள் மற்றும் பத்திரங்கள் மூலம் ஒரு மாதத்தில் 958.75 பில்லியன் ருபாய் கடன்களை பெற்றுள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, அரசாங்கம் பணத்தை அச்சிடவில்லை என்ற விஜித ஹேரத்தின் கூற்றையும் கம்மன்பில நிராகரித்துள்ளார்.

அரசாங்கம் தமக்கு நேரடியாகக் கடன் வழங்குவதற்குப் பணத்தை அச்சிடவில்லை என்றாலும், அந்நியச் செலாவணியை வாங்குவதற்கும் நிதிச் சந்தையில் பணப்புழக்கம் மற்றும் ஸ்திரத்தன்மையைப் பேணுவதற்கும் பணம் அச்சிடப்பட்டது என்பதை இலங்கை மத்திய வங்கியின் அறிக்கை வெளிப்படுத்தியுள்ளதாக கம்மன்பில சுட்டிக்காட்டியுள்ளார்.

Share
தொடர்புடையது
articles2FeEKtDKWyXj0ebdxP7pcx
செய்திகள்உலகம்

வரலாற்று வெற்றி: அமெரிக்காவிடமிருந்து மீட்கப்படும் 3 பழைமைவாய்ந்த சோழர் காலச் சிலைகள்!

தமிழகத்தின் பல்வேறு ஆலயங்களில் இருந்து திருடப்பட்டு அமெரிக்காவிற்குக் கடத்தப்பட்ட மிகவும் பழைமைவாய்ந்த மூன்று சோழர் காலச்...

image 3a35841713
செய்திகள்இலங்கை

இலங்கையின் சுகாதாரத் துறையில் புதிய திருப்பம்: அனைத்துத் தொழிற்சங்கங்களும் ஒரே குழுவாக ஒன்றிணைந்து செயற்பட இணக்கம்!

அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் நிறைவேற்று சபைக்கும் அனைத்து சுகாதார தொழிற்சங்கங்களுக்கும் இடையிலான கலந்துரையாடல் ஒன்று...

rajith
செய்திகள்இலங்கை

ராஜித சேனாரத்ன மீதான ஊழல் வழக்கு: விசாரணையின் முன்னேற்ற அறிக்கையைச் சமர்ப்பிக்க நீதிமன்றம் உத்தரவு!

மீன்பிடித் துறைமுக மணல் அகழ்வுத் திட்டத்தில் அரசாங்கத்திற்குப் பாரிய நட்டத்தை ஏற்படுத்தியதாகக் கூறப்படும் ஊழல் வழக்குத்...

images 1 8
செய்திகள்இலங்கை

சதொச வெள்ளைப்பூண்டு மோசடி: முன்னாள் விநியோக முகாமையாளர் உட்பட 3 பேர் கைது – பிணையில் விடுதலை!

2021 ஆம் ஆண்டு லங்கா சதொச நிறுவனத்தின் வெள்ளைப்பூண்டு கையிருப்பினை விற்பனை செய்ததில் அரசாங்கத்திற்கு 17...