tamilni 126 scaled
இலங்கைசெய்திகள்

காலி கோட்டையை பார்வையிட வரும் சுற்றுலா பயணிகளுக்கு தகவல்

Share

காலி கோட்டையை பார்வையிட வரும் சுற்றுலா பயணிகளுக்கு தகவல்

காலி கோட்டை இன்று பாரிய நெருக்கடிக்குள் சென்றுள்ளதாக புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க தெரிவித்துள்ளார்.

புத்தசாசன, சமய மற்றும் கலாசார அமைச்சின் செலவின தலையீடுகள் மீதான விவாதத்தில் நேற்று நாடாளுமன்ற உறுப்பினர் கயந்த கருணாதிலக்க எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,

காலி கோட்டையை பார்வையிட வரும் சுற்றுலா பயணிகளிடம் பணம் அறவிடப்படாது.

அருங்காட்சியகங்கள் மற்றும் பிற சுவாரசியமான இடங்களைப் பார்வையிட வரும் சுற்றுலாப் பயணிகளிடம் மட்டுமே பராமரிப்பு பணிகளுக்காக பணம் வசூலிக்கப்படுகின்றது.

காலி கோட்டை இன்று பாரிய நெருக்கடிக்குள் சென்றுள்ளது. கோட்டையின் சுவர் இடிந்து விழுந்துள்ளது. இதற்கு பணம் தேவை. ஆனால் ஹோட்டல்களுக்குள் நுழைபவர்களிடமிருந்தோ அல்லது தங்கியிருப்பவர்களிடமிருந்தோ பணம் வசூலிக்கப்படுவதில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
Kerala Drugs
இலங்கை

எரித்து அழிக்கப்பட கேரள கஞ்சா.

கடந்த காலங்களில் கடல் மார்க்கமாக கொண்டு வரப்பட்ட கஞ்சா பொதிகள் வெவ்வேறு திகதிகளில் கைப்பற்றப்பட்ட நிலையில்...

question mark
இலங்கை

செல்வந்தர்களுக்கு ஏற்பட்டுள்ள திடீர் நெருக்கடி.

திடீரெனப் பணக்காரர்களாகியுள்ள சந்தேகத்திற்கிடமான நபர்கள் குறித்த தகவல்களை வழங்குமாறு பொது மக்களை காவல்துறையினர் அண்மையில் கோரியிருந்த...

Gotabaya Rajapaksa 24
இலங்கை

கோட்டாபய ராஜபக்சவுக்கு எதிராக வாக்குமூலம் வழங்கிய நெருங்கிய உறவினர்!

கொழும்பு மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவினால் கோட்டாபய ராஜபக்ச மற்றும் சுகீஸ்வர பண்டார ஆகியோருக்கு எதிராக...

dengue original 1
இலங்கை

டெங்கு மரணங்களின் எண்ணிக்கை அதிகரிப்பு – பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும் உயர்வு.

அண்மையில், தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையின் பிரகாரம், நாட்டில் பதிவான டெங்கு மரணங்களின்...