tamilni 219 scaled
இலங்கைசெய்திகள்

அமெரிக்க பரப்புரையாளருக்கு பெருந்தொகை டொலர் செலுத்தியுள்ள மகிந்த!

Share

அமெரிக்க பரப்புரையாளருக்கு பெருந்தொகை டொலர் செலுத்தியுள்ள மகிந்த!

மகிந்த ராஜபக்ச நிர்வாகத்துடன் தொடர்புகளை வைத்திருந்த அமெரிக்க பரப்புரையாளரிடமிருந்து, கொலம்பியா பல்கலைக்கழகத்தில் கல்வி கற்பதற்காக, அமெரிக்காவின் தூதுவராக இருந்த பாகிஸ்தான் ஊடகவியலாளர் பெண்ணான முனா ஹபீப், பணத்தை பெற்றக்கொண்டார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

2015 ஆம் ஆண்டில், மூனா ஹபீப் கொலம்பியா பல்கலைக்கழகத்தின் இதழியல் திட்டத்திற்கு ஏற்றுக்கொள்ளப்பட்டார்.

எனினும் அவரால் 100,000 டொலர் கல்விக் கட்டணத்தை செலுத்த முடியவில்லை.இதன்போது மகிந்த ராஜபக்சவுடன் தொடர்புகளை கொண்டிருந்த அரசியல் நிர்ணயலாளரான இமாட் சுபேரி, ஊடகவியலாளருக்கு 25,000 டொலர் நிதியை வழங்க ஒப்புக்கொண்டுள்ளார்.

இதற்கிடையில் வரி ஏய்ப்பு, வெளிநாட்டு செல்வாக்கு மற்றும் பிரசார நிதி மீறல்களுக்காக சுபேரி, இப்போது அமெரிக்காவில் 12 ஆண்டு சிறைத்தண்டனைக்கு ஆளாகியுள்ளார்.

இதேவேளை 6.5 மில்லியன் அமெரிக்க டொலர்களை தமது கையிருப்பில் வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரிலேயே அவர் சிறைத்தண்டனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

அத்துடன் 2014 ஆம் ஆண்டு முழுவதும் இலங்கை அரசாங்கம், அமெரிக்காவின் ஆதரவைப் பெறுவதற்கும், போருக்குப் பிந்தைய பிம்பத்தை சரிசெய்வதற்கும் மகிந்த ராஜபக்சவின் அரசாங்கம் இமாட் சுபேரிக்கு பெருந்தொகை டொலர் பணத்தை செலுத்தியுள்ளது.

எனினும் சுபேரி இலங்கை அரசாங்கத்திற்காக என்ன பணிகளை நிறைவேற்றினார் என்பது தெளிவாகத் தெரியவில்லை எனவும் கூறப்படுகின்றது.

Share
தொடர்புடையது
images 10 4
செய்திகள்இலங்கை

தனியார் துறை ஊழியர்களுக்கும் ஓய்வூதியம்? அரசாங்கம் புதிய திட்டம் குறித்து ஆலோசனை!

தனியார் துறை ஊழியர்களின் எதிர்கால நலனைக் கருத்திற்கொண்டு அவர்களுக்குப் புதிய ஓய்வூதியத் திட்டமொன்றை (Pension Scheme)...

sajith
செய்திகள்இலங்கை

நாடாளுமன்றத்தில் பரபரப்பு: பெண் ஊழியர் துன்புறுத்தல் அறிக்கை ஏன் மறைக்கப்படுகிறது? சஜித் பிரேமதாச கேள்வி!

நாடாளுமன்ற பெண் ஊழியர்கள் எதிர்கொண்ட பாலியல் துன்புறுத்தல்கள் தொடர்பான விசாரணை அறிக்கை, நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்படாமல்...

செய்திகள்இலங்கை

இலங்கை மின்சார சபை மறுசீரமைப்பு இறுதிக்கட்டத்தில்! ஊழியர்களின் நலன்களுக்கு முக்கியத்துவம் என அறிவிப்பு!

நாட்டின் எதிர்கால மின்சாரத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் நோக்கில் திட்டமிடப்பட்டுள்ள இலங்கை மின்சார சபையின் (CEB)...

96b6d210 5408 11ef b8c3 f76c0a5f70a8.jpg
செய்திகள்உலகம்

யுனுஸின் ஆட்சி சட்டவிரோதமானது! – இந்தியாவிலிருந்து ஷேக் ஹசீனா விடுத்த முதல் பகிரங்க அறிக்கை!

கடந்த 2024-ஆம் ஆண்டு பங்களாதேஷில் ஏற்பட்ட மக்கள் புரட்சியைத் தொடர்ந்து நாட்டை விட்டு வெளியேறி இந்தியாவில்...