12 11
இலங்கைசெய்திகள்

எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படக்கூடிய அபாயம் குறித்து எச்சரிக்கை

Share

எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படக்கூடிய அபாயம் குறித்து எச்சரிக்கை

நாட்டில் மீண்டும் எரிபொருளுக்கு தட்டுப்பாடு ஏற்படக்கூடிய அபாயம் உருவாகியுள்ளது என எரிபொருள் விநியோகஸ்தர்கள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இலங்கைக்கு கொண்டு வரப்பட்ட எரிபொருள் கப்பல் ஒன்று, எரிபொருட்களை இறக்காமலேயே திரும்பிச் சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

எரிபொருளை இறக்குமதி செய்த குறித்த நிறுவனத்திற்கு சொந்தமான 70 எரிபொருள் நிலையங்களுக்கும் அரசாங்கம் தலையீடு செய்து எரிபொருள் விநியோகம் செய்ய வேண்டுமென கோரப்பட்டுள்ளது.

இந்த எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு எரிபொருள் விநியோகம் செய்யப்படாவிட்டால் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படக்கூடிய அபாயம் காணப்படுவதாக எரிபொருள் விநியோக சங்கத்தின் செயலாளர் கபில நாபுடுன்ன தெரிவித்துள்ளார்.

கடந்த அரசாங்கம் அவுஸ்திரேலிய நிறுவனமொன்றுக்கு 150 எரிபொருள் நிரப்பு நிலையங்களை வழங்குவதாக உறுதியளித்த போதிலும், 70 நிறுவனங்கள் மட்டுமே வழங்கியிருந்ததாகத் தெரிவிக்கப்படுகின்றது.

எரிபொருள் நிரப்பு நிலையங்கள் வழங்குவதில் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக கப்பல் திரும்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த அவுஸ்திரேலிய நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட எரிபொருள் நிரப்பு நிலையங்கள் நல்ல வருமானம் ஈட்டுபவை என கபில தெரிவித்துள்ளார்.

எரிபொருள் கப்பல் திருப்பி அனுப்பி வைக்கப்பட்ட காரணத்தினால் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் காணப்படுவதாகத் தெரிவித்துள்ளது.

உரிய முறையில் ஒப்பந்தம் செய்து கொள்ளாத நிறுவனத்துடன் கொடுக்கல் வாங்கல் செய்ய வேண்டாம் என தமது சங்கம், விநியோகஸ்தர்களை கேட்டுக்கொண்டதாக தெரிவித்துள்ளார்.

எனினும் இந்த விடயம் பற்றி தெரிந்து கொள்ளாது சில எரிபொருள் நிரப்பு நிலையங்கள் ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

சவூதி அரேபியா மற்றும் குவைட் போன்ற நாடுகளிலிடமிருந்து இரண்டு மாத கால கடன் அடிப்படையில் எரிபொருள் பெற்றுக்கொள்ள சந்தர்ப்பம் இருந்த போதிலும் கடந்த அரசாங்கங்க்ள அந்த வாய்ப்பை பயன்படுத்தவில்லை என கபில மேலும் தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
25 688de9f74b46a
இலங்கைசெய்திகள்

உள்நாட்டு இறைவரித் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு

2024/2025 மதிப்பீட்டு ஆண்டிற்கான வருமான அறிக்கைகளைச் சமர்ப்பிப்பதற்காக வழங்கப்பட்ட தனிப்பட்ட அடையாள எண்ணின் (PIN) செல்லுபடியாகும்...

25 688df4fc39fbe
இலங்கைசெய்திகள்

வாய்த்தர்க்கத்தில் ஒருவர் சுட்டுக்கொலை.. பொலிஸாரிடம் சரணடைந்த சந்தேகநபர்

அம்பலாந்தோட்டை, ஹுங்கம பிங்காம பகுதியில் இன்று (02) மதியம் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது....

25 688e26468e8e8
சினிமாசெய்திகள்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு காலமானார்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு உடல்நலக் குறைவால் காலமானார். அவர் தனது 71ஆவது வயதில்...

25 688e158f2c449
இலங்கைசெய்திகள்

சட்டத்தை நடைமுறைப்படுத்தியவரால் நிராகரிக்கப்பட்ட ஜனாதிபதி சிறப்புரிமைகள்

இலங்கையின் முதல் நிறைவேற்றதிகார ஜனாதிபதியான ஜே.ஆர்.ஜெயவர்த்தனவால் கொண்டுவரப்பட்ட ஜனாதிபதிகளுக்கான சலுகைகளை அவரே பெற்றுக்கொள்ளவில்லை என அரசியல்...