6 25
இலங்கைசெய்திகள்

எரிபொருளின் விலை குறித்து அமைச்சர் விஜித விடுத்துள்ள அறிவிப்பு

Share

எரிபொருளின் விலை குறித்து அமைச்சர் விஜித விடுத்துள்ள அறிவிப்பு

எரிபொருட்களுக்கான விலைகள் அதிகரிக்கும் சாத்தியம் காணப்படுவதாக அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள மோதல் நிலைமை காரணமாக எரிபொருள் விலை உயர்வடைந்தால் அதனை எவ்வாறு கட்டுப்படுத்துவது என்பது தொடர்பில் ஆராய விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.

பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் அவதானிப்பு அறிக்கைகளின் அடிப்படையில் இந்தக் குழு பரிந்துரை செய்யும் என விஜித ஹேரத் குறிப்பிட்டுள்ளார்.

அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் கூறுகையில்,

“மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழ்நிலையால் எண்ணெய் விலை உயரும் அபாயம் உள்ளது. இது தொடர்பில் பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் கண்காணிப்பு அறிக்கை வழங்கப்பட்டுள்ளது.

அந்த சூழ்நிலையில் தலையிட்டு எண்ணெய் விலையை எவ்வாறு கட்டுப்படுத்துவது மற்றும் அதை எவ்வாறு சமாளிப்பது என்பதை இந்த குழுவும் முடிவு செய்திருந்தது.

அரசாங்கம் எரிபொருள் விலையை குறைத்த போதிலும் பஸ் கட்டணம் ஓரளவு குறைக்கப்பட்ட போதிலும் பாடசாலை போக்குவரத்து கட்டணம் குறைக்கப்படவில்லை.

எனவே, பாடசாலை மாணவர்களுக்கான போக்குவரத்து சேவைக் கட்டணங்களை குறைப்பது குறித்த பரிந்துரைகள் இரண்டு வாரங்களுக்குள் பெற்றுக்கொள்ளப்படும்” என தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
22 4
செய்திகள்இலங்கைபிராந்தியம்

யாழ்ப்பாணத்திலிருந்து காணாமல் போன இரு மீனவர்கள் தமிழ்நாடு கடலோரப் பகுதியில் மீட்பு!

யாழ்ப்பாணம் காங்கேசன்துறை ஊரணி கடற்பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை மீன்பிடிக்கச் சென்ற நிலையில் காணாமல் போன இரண்டு...

21 4
செய்திகள்அரசியல்இலங்கை

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் வழக்கு: சுரேஷ் சலே மூன்றாவது சந்தேகநபராகப் பெயரிடப்பட்டார்!

அரச புலனாய்வுச் சேவையின் (SIS) முன்னாள் பிரதானியும், ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரலுமான சுரேஷ் சலே, உயிர்த்த...

20 3
செய்திகள்உலகம்

அஸர்பைஜான் மீது ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான நிலையம் மற்றும் பாடசாலை இலக்கு!

மத்திய கிழக்கில் நிலவும் போர் பதற்றம் அண்டை நாடுகளுக்கும் பரவி வரும் நிலையில், அஸர்பைஜானின் கட்டுப்பாட்டில்...

19 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

போலி உறுதிப்பத்திரம் தயாரித்த பெண் சட்டத்தரணிக்கு 12 ஆண்டு சிறை: கொழும்பு மேல் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

கொழும்பு பொரளைப் பகுதியில் உள்ள பெறுமதியான காணியொன்றுக்குப் போலி உறுதிப்பத்திரங்களைத் தயாரித்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட பெண்...